பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 91

செய்தானோ;     விரைந்து அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி -
அப்படி  விரைந்து  இந்  நிலத்தில்  (நீ) செய்யப்படுவாய்; ஐயப்படல்
தெரிந்தனெனால்
 -  (அது  பற்றி)  சந்தேகப்படாதே  (அதை  நான்)
தெரிவித்து விட்டேன்
 

சையப்படிவம்     -  மலை  போன்ற  வடிவம்.  மெய்  எப்படிச்
செய்தனன்   -  கால்களையும்  கைகளையும்  தலையையும்  வெட்டி
முண்டமாகச் செய்த நிலை. இப்படியில் - இப்பூமியில். ஆல் - அசை.
 

                                                  (50)
 

7777.‘"கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என், தேடி?" எனின்,
தன் தாதை படும் துயர், தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்.
 

கொன்றான்     ஒழிய  -  (கும்பகருணனைக்)  கொன்றவனாகிய
(இராமனை) விட்டு;  கொலை   கோள்  அறியா  நின்றானொடு  -
அக்கொலைச்    செயலைச்    செய்து    அறியாது   நின்றவனாகிய
(இலக்குவனை);  தேடி  நின்றது  என்  எனின்  - (இந்த அதிகாயன்)
தேடிப்  (போரிட) நிற்பது எற்றுக்கு எனின்; தன் தாதை படும் துயர் -
(அதிகாயனாகிய)  தன்னைப்  பெற்ற  இராவணன்  படும் துன்பத்தை;
தந்தையை முன் வென்றானை - (சிறிய) தந்தையாகிய கும்பகருணனை
முன்பு  வென்றவனாகிய  இராமனுக்கு;  இயற்றுறும் வேட்கையினால் -
உண்டாக்கும் ஆசையினால்;
 

தேடி     - தேடி. தன் தாதை - அதிகாயனாகிய தன்னைப் பெற்ற
தந்தையாகிய  இராவணன், தந்தை, சிறிய தந்தையாகிய கும்பகருணன்.
கொலை கோள் - கொலைத் தொழிலைச் செய்தல்.
 

                                                  (51)
 

7778.

வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
ஏனோர்களும், இவ் உரை கேண்மின; இவன்-
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான், அமைவான்.
 

வானோர்களும்     -    வானில்    உள்ள    தேவர்களும்;
மண்ணினுளோர்களும்    -   நிலவுலகில்   உள்ளவர்களும்;   மற்று
ஏனோர்களும்
 -  மற்றும்  உள்ள  பிறரும்; இவ் உரை கேண்மின் -
இந்தச்  சொல்லைக்  கேளுங்கள்;  இவன் தானே பொருவான் - இந்த
அதிகாயன்  தானே  (இலக்குவனுடன்)  போரிடுவான்;  அயலே  தமர்
வந்து ஆனோரும்