பக்கம் எண் :

910யுத்த காண்டம் 

குரங்குகள்  எல்லாம்  இமையவர்கள்  வாழ்த்தியதனால் உயிர் பெற்று
எழுந்தன (ஆகலின் என்க).
 

                                                 (58)
 

              இந்திரசித்தின் தலையை ஏத்தி, அங்கதன் முன் செல்ல
                                    இலக்குவன் பின் செல்லுதல்

 

9174.ஆக்கையின்நின்று வீழ்ந்த அரக்கன்தன் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து
                                            வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் இளவல் போனான்.
 

ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் தன் தலையை -உடம்பில்
நின்று  அறுபட்டு  விழுந்த இந்திரசித்தின் தலையை; உள்ளம் கூர்ந்த
வாலி  சேய்  அம்கை தூக்கினன் தூசி செல்ல
- மனமகிழ்ச்சி மிக்க
வாலியின்   மகனான    அங்கதன்  அகங்கையில்  தூக்கிக்  கொண்டு
முன்னணியில்  செல்லா  நிற்க;  மேக்குயர்ந்து அமரர்  வெள்ளம் -
விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் திரள்;அள்ளியே தொடர்ந்து
வீசும்   பூக்கிளர்  பந்தர்   நீழல்
 -  அள்ளினவாய்த் தொடர்ந்து
சொரிகின்ற  மலர்களின்  கிளர்ச்சி  மிக்க  பந்தல்   நிழலில்; இளவல்
அனுமன்   மேல்   போனான்
  -  இலக்குவன்  அனுமன்  தோள்
மேலனாய்ப் போனான்
 

                                                 (59)
 

9175.வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன், மீதுற்று
ஓங்கிய முடியன், திங்கள் ஒளி பெறு முகத்தன், உள்ளால்
வாங்கிய துயரன், மீப் போய் வளர்கின்ற புகழன், வந்துற்று
ஓங்கிய உவகையாளன், இந்திரன், உரைப்பதானான்;

 

இந்திரன்  வீங்கிய தோளன், தேய்ந்து மெலிகின்ற பழியன் -
(அக்காட்சியைக்  கண்ட) இந்திரன்  பூரித்த  தோள்களையுடையவனாய்,
தனக்கிருந்த பழி தேய்ந்து மெலியப் பெற்றவனாய்;