பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 911

மீதுற்று ஓங்கிய முடியன் திங்கள் ஒளிபெறும் முகத்தான் - மேலே
நிமிர்ந்த  முடியை   உடையவனாய்ச்  சந்திரனைப் போல ஒளி பெற்ற
முகத்தை  உடையவனாய்; உள்ளால் வாங்கிய  துயரன்  மீப்போய்
வளர்கின்ற  புகழன்
 - உள்ளத்திருந்த துயரம் வாங்கப் பெற்றவனாய்,
மேலே  சென்று வளர்கின்ற புகழை உடையவனாய்; வந்துற்று ஓங்கிய
உவகையாளன்   உரைக்கலுற்றான்
 -  புதிதாக   வந்து  பொருந்தி
உயர்ந்துள்ள மகிழ்ச்சியுடைவனாய்ச் சொல்லத் தொடங்கினான்.
 

                                                 (60)
 

9176.‘“எல்லி வான் மதியின் உற்ற கறை என, என் மேல் வந்து
புல்லிய வடுவும் போகாது” என்று அகம் புலம்புகின்றேன்,
வில்லியர் ஒருவர் நல்க, துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்;
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை? இனி, சிறுமை
                                         யாதோ?

 

“எல்லிவான்  மதியின் உற்றகறை  என - ‘இரவில்  விளங்கும்
வெள்ளிய   சந்திரனிடத்துப்   பொருந்தியகளங்கம்  போல; என்மேல்
வந்து புல்லிய வடுவும் போகாது“ என்று அகம் புலம்புகின்றேன்
-
என்மேல்  வந்து  பொருந்தியுள்ள  பழியும்  நீங்காது போலும்” என்று
மனம்  புலம்புகின்ற  யான்; வில்லியர் ஒருவர் நல்க  துடைத்துறும்
வெறுமை   தீர்ந்தேன்
  -   (இப்போது)  வில்  வீரராகிய  ஒருவர்
அருளியதால்  அந்த  வடுதுடைக்கப்பெற்று  இதுகாறும்  இருந்த  என்
வெறுமைத்     தன்னையும்    தீர்ந்தேன்; செல்வமும்    பெறுதற்கு
உண்டோகுறை?     இனி,    சிறுமையாதோ?
 -   இனி    என்
அரசச்செல்வத்தையும்  பெறுதற்குக்   குறையேதும்  உண்டோ?  இனிச்
சிறுமைதான்யாதுளது?
 

                                                  (61)
 

9177.தென்தலை   ஆழி   தொட்டோன்  சேய் அருள் சிறுவன
                                         செம்மல்,
வென்று அலைத்து என்னை ஆர்த்துப் போர்த் தொழில்
                                கடந்த வெய்யோன்,