| தன் தலை எடுப்பக் கண்டு, தானவர் தலைகள் சாய, என் தலை எடுக்கலானேன்; இனிக் குடை எடுப்பென்’ என்றான். | தென்தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் - அழகிய இடத்தை உடைய கடலைத் தோண்டின சகரபுத்திரரின் வழித்தோன்றலாகிய இராமபிரானின் அருளைப் பெற்ற சிறுவனான செம்மைக் குணம் வாய்ந்த அங்கதன்; என்னை வென்று அலைத்து ஆர்த்து போர்த்தொழில் கடந்த வெய்யோன் - என்னை வென்று வருத்திக்கட்டிப் போர்த் தொழிலில் வெற்றிபெற்ற கொடியவனாகிய; தன்தலை எடுப்பக் கண்டு தானவர் தலைகள் சாய -இந்திரசித்தினது தலையை எடுப்பக் கண்டு, அசுரர்கள் தலைகள் அச்சத்தால சாயுமாறு; என்தலை எடுக்கலானேன் இனிக் குடை எடுப்பேன் என்றான் - என்னுடைய தலையைத் தூக்கிப்பார்க்கலானேன; இனி என் வெண்கொற்றக் குடையையும் எடுப்பேன்’ என்று கூறினான். | (62) | 9178. | வரதன், போய் மறுகாநின்ற மனத்தினன், ‘மாயத்தோனைச் சரதம் போர் வென்று மீளும், தருமமே தாங்க’ என்பான், விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் பரதம் போன்று இருந்தான், தம்பி வருகின்ற பரிசு பார்த்தான். | வரதன், போய் மறுகா நின்ற மனத்தினன் - வரந்தரத்தக்க பெருமையனாகிய இராமன் மிகவும் கலங்கிய மனத்தை உடையவனாய்; தருமமே தாங்க மாயத்தோனைச் சரதம் போர் வென்று மீளும் என்பான் - ‘தருமமே துணைநின்று தாங்க மாயத்தவனாகிய இந்திரசித்தனைப் போரில் வென்று (இலக்குவன்) நிச்சயமாகத் திரும்புவான்’ என்று எண்ணுகின்றவனாய்; விரதம் பூண்டு, உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் - விரதத்தை மேற்கொண்டு உயிரைத்தாங்கியவனாய் தனது மீட்சியை எதிர் நோக்கி இருக்கும்; பரதன் போன்று, தம்பிவருகின்ற பரிசுபார்த்தான் இருந்தான் - பரதனைப் போன்று, |
|
|
|