பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 913

தம்பி  இலக்குவன்  மீண்டும்  வருகின்ற  தன்மையை எதிர்பார்த்துக்
கொண்டு இருந்தான்.
 

                                                (63)
 

9179.வன் புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத்
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை,
அன்புகொல்? அழு கணீர்கொல்? ஆனந்த வாரியேகொல்?
என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார், அது
                                        ஓர்வார்?

 

வன்புலம்  கடந்து  மீளும்  தம்பிமேல் வைத்த  -  வலிதாகிய
பகைப்புலத்தில்  சென்று வென்று மீளுகின்ற  தம்பிமேல்  வைத்த; தன்
நயனப்புலம்  என்னும்  தாமரை  மாலை சொரியும் தாரை
-  தன்
கட்புலம்   என்கின்ற    தாமரை   மாலை  மாலையாகச்  சொரிகின்ற
கண்ணீர்த்தாரை;   அன்பு  கொல்?   அழுகணீர்கொல்?  ஆனந்த
வாரியே கொல்?
 - அன்பு காரணமானதோ? அல்லது (அவன் பிரிந்த
துன்பம்  நினைந்து  வருந்தி)  அழுத  கண்ணீரோ?  அல்லது அவனது
வெற்றி  கண்டு  மகிழ்ந்து  உகுத்த   உவகைக்  கண்ணீரோ? அல்லது;
என்புகள் உருகிக் சோரும் கருணை கொல்? யார், அது ஓர்வார்?
- என்புகளும் உருகும்படியாகச்  சோர்கின்ற  கருணைக்   கண்ணீரோ?
அதை அறிபவர்யார்? யாருமிலர்!
 

ஒருவர்க்குக்     கண்ணீர் பெருகுதற்குரிய  காரணங்கள்  அன்பும்,
அழுகையும், கருணையும் என நான்காகுமானால், இராமன்  இலக்குவன்
மீண்டமை  கண்டு  சொரிந்த   கண்ணீர்  இந்நான்கனுள்  எக்காரணம்
பற்றியது  என  அறிவது  அரிதாகுமென்பார்,  “யார்  அது ஓர்வார்?”
என்றார்.     ஒருவேளை     இந்நான்குமே    காரணம்    ஆதலும்
கூடும்! “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்  ஆர்வலர் புன் கணீர்
பூசல்தரும்”  (71) என்னும் வள்ளுவத்தின்  படி  அன்பினால்  கண்ணீர்
தோன்றலாம்;  பிரிவினால்  கண்ணீர்   வருமென்பதை உலகியலிலேயே
உணரலாம்! உவகையினால்    கண்ணீர்    ருமென்பதை,  “வானரைக்
கூந்தல்  முதியோள்  சிறுவன்  களிறெறிந்து   பட்டனனென்னுமுவகை,
ஈன்ற  ஞான்றினும்  பெரிதே  கண்ணீர்,  நோன்   கழை  துயல்வரும்
வெதிரத்து.  வான்பெயத்தூங்கிய  சிதரினும்  பலவே”  (277)  என்னும்
புறப்பாட்டால்  உணரலாம்.  கருணையென்பது தொடர்பு  கருதாத மன
நெகிழ்ச்சி  உயிர்கள் மேல் வைத்த நேயம். இஃது  என்புருகக்  கசியும்
கசிவு.   இராமனின்   கண்ணீர்  இதில்  எவ்வகைப்  பட்டது?  என்று
வினவிய கவிஞர், யாரறிவார் என முடித்துள்ளார்.
 

                                                 (64)