பக்கம் எண் :

914யுத்த காண்டம் 

       இராமன் திருவடிகளில் இந்திரசித்தின் தலையை வைக்க, அவன்
                                         களிப்புக் கொள்ளுதல்
 

9180.விழுந்து அழி கண்ணின் நீரும், உவகையும், களிப்பும், வீங்க,
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்-
கொழுந்து எழும் செக்கர்க் கற்றை வெயில் விட, எயிற்றின்
                                          கூட்டம்
அழுந்துற, மடித்த பேழ் வாய்த் தலை அடியறை ஒன்று ஆக,

 

விழுந்து  அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க -
கண்களிலிருந்து   விழுந்து    அழிகின்ற    கண்ணீரும்,  மகிழ்ச்சியும்,
களிப்பும்  பெருக; எழுந்து எதிர் வந்த வீரன் இணையடி முன்னர் -
எழுந்து    எதிர்    வந்த    இராமனுடைய     இரு    திருவடிகட்கு
முன்னர்; கொழுந்து   எழும்   செக்கர்க்கற்றை வெயில்   விட  -
ஒளிக்கொழுந்து    எழுகின்ற    செவ்வானம்   போன்ற   செம்பட்டை
மயிர்க்கற்றை  வெயில் வீசாநிற்க; எயிற்றின் கூட்டம் அழுந்துறமடிந்த
பேழ்வாய்த்  தலை
 -  பற்களின்  கூட்டம்  அழுந்துமாறு மடித்துள்ள
பிளந்த  வாயையுடைய  இந்திரச்சித்தின்  தலையை; அடியுறை  ஒன்று
ஆக இட்டான்
- ஓர் அடியுறைப் பொருளாக வைத்தான்.
 

                                                  (65)
 

9181.தலையினை   நோக்கும்;   தம்பி   கொற்றவை  தழீஇய
                                    பொன் தோள்
மலையினை நோக்கும்; நின்ற மாருதி வலியை நோக்கும்; 
சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும்; செய்த

கொலையினை     நோக்கும்; ஒன்றும்     உரைத்திலன்,
                                களிப்பு கொண்டான்.

 

களிப்புக்   கொண்டான்  ஒன்றும்   உரைத்திலன்   -   (தன்
அடியுறையைக்  கண்டு)   களிப்புக்கொண்டவனாகிய  இராமன் ஒன்றும்
பேசாதவனாய்;  தலையினை நோக்கும் - தன் முன் வைக்கப்பட்டுள்ள
இந்திரசித்தன்  தலையினை  நோக்குவான்; தம்பி கொற்றவை தழீஇய
பொன்தோள் மலையினை நோக்கும்
- பின்பு (அத்தலைய வீழ்த்திய)
தம்பியின் வெற்றத்திருதழுவிய அழகிய