பக்கம் எண் :

918யுத்த காண்டம் 

வல்லமைமிகக்     உயர்ந்த  பண்பினனாலும்     அன்று;   வேறு ஓர்
தெய்வத்தின் சிறப்பும்    அன்று
  -   வேறோர்     தெய்வத்தின்
சிறப்பினாலும் அன்று; வீடணன் தந்த வென்றி ஈது  என மெய்ம்மை
விளம்பி   இப்பால்  இனிதின்   இருந்தனன்
  -  ‘வீடணன்  தந்த
வென்றி’ என  மெய்யான    காரணத்தைக் கூறிப் பாராட்டிவிட்டு இங்கு
இனிதாக இருந்தான்.
 

நாகபாசப்     படலத்  திறுதியில்   “கெடுத்தனை  வீடணா“ என்று
(கம்ப.8227) அவலாதி சயத்தில் இராமன்  உரைத்த  வார்த்தை வீடணன்
மனத்தைப்   புண்படுத்தியிருக்குமாயின்   இங்கு      “வீடணன்  தந்த
வென்றி“ எனப்  பாராட்டியது அதனைச் சமன்    செய்ததாகும் என்பது
மகா வித்துவான். வே.சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.
 

                                                (70)