மிகைப் பாடல்கள் | 16. மாயா சனகப் படலம் | 793. | இம் மொழி அரக்கன் கூற, ஏந்திழை இரு காதூடும் வெம்மை சேர் அழலின் வந்த வே ............................ ...........ல் வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள்; மீட்டும் விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு, இவை விளம்பலுற்றான்: | (54-1) | 794. | மங்கையை, குலத்துளாளை, தவத்தியை முனிந்து, வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றான், குலத்துக்கே தக்கான் என்று கங்கை அம் சென்னியாலும் கண்ணனும் கமலத்தோனும் செங்கைகள் கொட்டி உன்னைச் சிரிப்பரால், சிறுமை என்னா. | (72-1) | 795. | அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற, நொந்து, ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினன் ஆய், சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின் உந்தா, உளம் கொதித்து, ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான். | (89-1) | 17. அதிகாயன் வதைப் படலம் | 796. | முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில் சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங் கதிரோன் இகல் கண்டிட ஏகினனால். | (20-1) |
|
|
|