பக்கம் எண் :

92யுத்த காண்டம் 

உடன்     பொருவான் - பக்கத்தில் துணையாக உறவினர்களாய்ச்
சேர்ந்து     வந்தவர்களுடன்     போரிடுவதற்கு; அமைவான்     -
சம்மதிப்பான்.
 

பொருவான் - போர் புரிவதற்கு, அமைவான் - சம்மதிப்பான்.
 

                                                  (52)
 

                                இராமன் இலக்குவனை அனுப்பல்
 

7779.‘எழுவாய், இனி என்னுடன்’ என்று, எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
தழுவா, ‘உடன் ஏகுதி; தாழல்!’ எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்.
 

இனி  என்னுடன்  எழுவாய்  என்று  -  இப்போது  என்னுடன்
(வருவதற்கு) எழுவாய்  என்று;  எரியும்  மழுவாய் நிகர் வெஞ்சொல்
வழங்குதலும்
 -  எரிகின்ற  மழுவின்  வாயை  ஒத்த கொடுமையான
சொல்லை  (மயிடன்)  சொல்லுதலும்; தொழுவார் தொழு தாள் அரி -
தொழுபவர்கள்   தொழத்தக்க  திருப்பாதங்களையுடைய   திருமாலின்
அவதாரமாகிய    இராமபிரான்;     தழுவா    -    (இலக்குவனைத்)
தழுவிக்கொண்டு; உடன் ஏகுதி தாழல் எனச் சொல்லுதலும் - உடனே
போ, கால தாமதம் செய்யற்க என்று சொன்னபோது.
 

வாய்     -  நுனி,  தாழல்  -  காலதாமதம்  செய்யற்க,  அரி  -
திருமாலவதாரமாகிய  இராமன்.  தழுவா - செய்யா எனும் வாய்பாட்டு
உடன் வினையெச்சம்.
 

                                                  (53)
 

                            வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்
 

7780.‘எல்லாம் உடன் எய்திய பின், இவனே
வில்லானொடு போர் செய வேண்டும்’ எனா,
நல்லாறுடை வீடணன், நாரணன்முன்
சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்.
 

நல்லாறுடை   வீடணன் - நல்லற வழியில் செல்லும் தன்மையுள்ள
வீடணன்;   எல்லாம்  உடன்   எய்திய   பின்   -  நாம்  எல்லாம்
(இலக்குவனுக்குத்)  துணையாக  உடன்  போய்ப்  (போர்க்களம்) சேர்ந்த
பின்; இவனே வில்லானொடு போர் செய வேண்டும் எனா