797. | தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித் தார் வெள்ளம் அளப்பு இல; தந்திஇனக் கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம் பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால். | (20-2) | 798. | மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து எல் ஏறிய வாள், எழு, வல் முசலம், வில்லோடு அயில், வெங் கதை, வேல் முதலாம் பல் ஆயுத பத்தி பரித்து உடையார். | (25-1) | 799. | என, வந்த நிசாசரன், இவ் உரையைத் தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும், சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம் அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான். | (50-1) | 800. | என்றே உலகு ஏழினொடு ஏழினையும் தன் தாமரைபோல் இரு தாள் அளவா - நின்றான் உரை செய்ய, நிசாசரனும் பின்றா உரை ஒன்று பிதற்றினனால். | (52-1) | 801. | வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம் துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்; வெங் கணை இலக்குவன் வெகுண்டு, உகாந்தத்தில் பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான். | (103-1) | 802. | முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின் விடு கணை மழை நெடுந் தாரை, வெம் மதக் கட களிறு அடங்கலும் கழிய, கால், கரம், குடல், தலை, குறைத்தமை கூறல் ஆவதோ? | (103-2) | 803. | அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம் அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு; அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி; அறுந்தன, கட களிறு ஆய நாமமே. | (103-3) | 804. | அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள் செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய் |
|
|
|