| ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத் தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ? | (103-4) | 805. | மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற, முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில், கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு, தாள் அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார். | (103-5) | 806. | அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை; தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல் விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும் தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால். | (103-6) | 807. | பெருங் கடை யுக மழை பிறழ, தன் ஒரு கரம் படு சிலையினின் கான்ற மாரியின், சரம் படச் சரம் பட, தாக்கு இராக்கதக் கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ? | (103-7) | 808. | இலக்குவக் கடவுள்தன் ஏவின் மாரியால், விலக்க அருங் கரி, பரி, இரதம், வீரர் என்று உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே. | (119-1) | 809. | காந்திய அரக்கனும் கணையின் மாரிகள் பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்; மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே. | (121-1) | 810. | கார்முக விசை உறும் கணையின் மாரியால் பார வெஞ் சிலை அறுத்து, அவன்தன் பாய் பரித் தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி, மற்று ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான். | (121-2) |
|
|
|