| 820. | ‘வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர் ஆர்இனித் தடுக்க வல்லார்?’ எனப் பதைத்து, அமரர் எல்லாம், சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்; சுடரும் வை வேல் போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி. | (186-7) | | 821. | அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக் கண்டே, செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா, வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி, துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி. | (186-8) | | 822. | உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து, ஏழு கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து, காலாள் இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி, பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின் ஏன்றான். | (186-9) | | 823. | புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் திரிதர, அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி, எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார். | (195-1) | | 824. | வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஒயான், |
|
|
|