18. நாகபாசப் படலம் | | 829. | எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்; எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை, உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்; உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். | (106-1) | | 830. | நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்; நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்; முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்; முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன். | (106-2) | | 831. | சிந்து வாளி செறிதலும், சேவகன் ஐந்து நூறு கடுங் கணையால்; அவன் உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன் வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். | (128-1) | 832.
| அழித்தனன் தடத் தேர் என்று அழன்று, தீ விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத் தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள் கொழித்தனன்; இமையோர் மெய் குலுங்கினார். | (148-1) | | 833. | அங்கதன் தடந் தோளினும் மார்பினும் புங்க வாளி புகப் புக, தேர் எதிர், சிங்கஏறு அனையான் திரள் தோள்வரை மங்க, வேறொர் மராமரம் வீசினான். | (148-2) |
|
|
|