பக்கம் எண் :

926யுத்த காண்டம் 

18. நாகபாசப் படலம்
 

829.

எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன்
                                       ஆர்த்தான்;
உரும்இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான்.

 

                                             (106-1)
 

830.

நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
    கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங்
    கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
    கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக்
    கணை முடித்தான், மொய்ம்பன்.
 

                                             (106-2)
 

831.

சிந்து வாளி செறிதலும், சேவகன்
ஐந்து நூறு கடுங் கணையால்; அவன்
உந்து தேரை ஒறுத்தனன்; வெய்யவன்
வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான்.

 

                                             (128-1)
 

832.

அழித்தனன் தடத் தேர் என்று அழன்று, தீ
விழித்தனன்; கடு நெஞ்சம் வெகுண்டு எழத்
தெழித்தனன்; சிலையால் திறல் வாளிகள்
கொழித்தனன்; இமையோர் மெய் குலுங்கினார்.

 

                                             (148-1)
 

833.

அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்கஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான்.

 

                                             (148-2)