பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 927

834.

மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி
முற்று நாளில் முயற்சி முரஞ்சவே.

 

                                             (148-3)
 

835.

கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடிஏறு எனக் குத்தினான்.

 

                                             (148-4)
 

836.

குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர்அரோ.

 

                                             (148-5)
 

837.

மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான்.

                                            (148-6)
 

838.

கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான்.

 

                                             (148-7)
 

839.

பல்ஆயிரத்தின் முடியாத டக்கம் அவை வீச வந்த படர்
                                             கால்
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி
                                          சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே
                               விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி
                                           வடுவும்.
 

                                              (264-1)
 

840.

பறவை நாயகன்தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,