| 834. | மல் திண் தோளின் அடித்த மராமரம் இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர் பொன் திண் தேர்மிசைத் தாவினன் பொங்கெலி முற்று நாளில் முயற்சி முரஞ்சவே. | (148-3) | | 835. | கண்ட வாலிதன் காதலனும், கனல் விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன் மண்டு தேர்மிசையில், குதியா வலி கொண்டு, வான் இடிஏறு எனக் குத்தினான். | (148-4) | | 836. | குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர் தத்தி, வல் வில் தடக் கையினால், சரம் வித்துராமுனம் வீழ்த்தினன், தேர்அரோ. | (148-5) | | 837. | மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்; ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று, ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான்.
| (148-6) | | 838. | கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய், காலின் நூறி, கரங்களின் மற்று அவன் தாலு மூலத்து அடிப்ப, தனு வலான், மால் உழந்தவர் போல மயங்கினான். | (148-7) | | 839. | பல்ஆயிரத்தின் முடியாத டக்கம் அவை வீச வந்த படர் கால் செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று, எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன், வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். | (264-1) | | 840. | பறவை நாயகன்தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி, கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி, |
|
|
|