| இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்; மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ, | (270-1) | | 841. | இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர, பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக, கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ, அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தான். | (273-1) | 19. படைத் தலைவர் வதைப் படலம் | | 842. | ‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால், களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்; இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின் மிக்கீர்! | (1-1) | | 843. | ‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல் தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி, மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம் போர்ப் பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’ என்றான். | (1-2) | | 844. | ‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ! துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார். | (16-1) |
|
|
|