பக்கம் எண் :

928யுத்த காண்டம் 

இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ,

 

                                             (270-1)
 

841.

இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர,
பரவும் எண் திசையைத் தாங்கும் பகட்டினம் இரியல் போக,
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ,
அரு வரை அண்ட கோளம் பிளக்க, நின்று, அனுமன்
                                    ஆர்த்தான்.

 

                                             (273-1)
 

19. படைத் தலைவர் வதைப் படலம்
 

842.

‘அளப்ப அரும் வெள்ளச் சேனை நமர் திறத்து அழிந்தது
                                       அல்லால்,
களப்படக் கிடந்தது இல்லை, கவிப் படை ஒன்றதேனும்;
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும், என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது, விறலின்
                                          மிக்கீர்!
 

                                               (1-1)
 

843.

‘இகல் படைத் தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல்
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர்ப் படை கரத்தின் ஏந்தி,
மிகைப்படும் தானை வெள்ளம் ஈர்-ஐந்தோடு ஏகி, வெம்
                                           போர்ப்
பகைப் பெருங் கவியின் சேனை படுத்து, இவண் வருதிர்’
                                          என்றான்.

 

                                               (1-2)
 

844.

‘மன்னவர் மன்னவ! மற்று இது கேண்மோ!
துன்னும் அரக்கரின் வீரர் தொகைப்பட்டு
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று, ஆங்கு
அந் நரன் அம்பினில் ஆவி அழிந்தார்.

 

                                              (16-1)