| 845. | மத்த மதக் கரியோடு மணித் தேர் தத்துறு வாசி, தணப்பு இல காலாள், அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம், வித்தக மானிடன் வாளியின், வீந்த. | (16-2) | | 846. | இப் படையோடும் எழுந்து இரவின்வாய் வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை எப் புறமும் செவிடு உற்றதை எண்ணி, துப்புறு சிந்தையர் (வீரர்) தொடர்ந்தார். | (20-1) | | 847. | தேர் நிரை சென்றது; திண் கரி வெள்ளக் கார் நிரை சென்றது; கால் வய வாசித் தார் நிரை சென்றது; தாழ்வு அறு காலாள் பேர் நிரை சென்றது; பேசுவர் யாரே? | (22-1) | | 848. | ‘ஐய! கேள்; சிவன் கை வாள் கொண்டு, அளப்ப அரும் புவனம் காக்கும் வெய்யவன் வெள்ளச் சேனைத் தலைவன் விழுமம் பெற்றோர், கை உறும் சேனையோடும், கடுகினர் கணக்கிலாதோர், மொய்படைத் தலைவர்’ என்று, ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான். | (29-1) | | 849. | ‘இன்னவர் ஆதியர் அளப்பிலோர்; இவர் உன்ன அருந் தொகை தெரிந்து உரைக்கின், ஊழி நாள் பின்னரும் செல்லும்’ என்று ஒழியப் பேசினான்; அன்ன போர் அரக்கரும் களத்தை அண்மினார். | (35-1) | | 850. | கொடுமரத்திடை இராகவன் கோத்த வெம் பகழி அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்கக் கடிகை உற்றதில் களைந்தது கண்டு, விண்ணவர்கள், ‘விடியலுற்றது நம் பெருந் துயர்’ என வியந்தார். | (58-1) |
|
|
|