| 851. | வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன் கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு, இலர் குறைந்தார்; மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார். | (67-1) | | 852. | தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா, போர் மாலி பொருந்து தரைப்பட, முன் ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு ஏர் மார்பிடை போக எறிந்தனனால். | (81-1) | | 853. | அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன் வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு, ‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன் மேல் துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால். | (85-1) | | 854. | சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம் பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம் பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு எரி வெங் கணை மாரி இறைத்தனனால். | (85-2) | | 855. | முடிவுற்றனன். மாருதி மோதுதலால், கொடு வச்சிர, எயிற்றன் எனும் கொடியோன்; விடம் ஒத்த பிசாசன் விறற் பனச- னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால். | (92-1) | | 856. | பொர நின்ற பணைப் புயவன் பனசன் நிருதன் களமீது நெருக்கி, அதில் பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத் தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால். | (92-2) | | 857. | பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய, தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங் கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின் இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால். | (93-1) |
|
|
|