பக்கம் எண் :

930யுத்த காண்டம் 

851.

வெற்றி வெம் படைத் தலைவர் என்று உரைத்திடும்
                                      வெள்ளத்து
உற்ற போர் வலி அரக்கர்கள், ஒரு தனி முதல்வன்
கொற்ற வெஞ் சரம் அறுத்திட, அளப்பு, இலர் குறைந்தார்;
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித் தனி மலைந்தார்.

 

                                               (67-1)
 

852.

தேர் போய் அழிவுற்றது எனத் தெளியா,
போர் மாலி பொருந்து தரைப்பட, முன்
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு
ஏர் மார்பிடை போக எறிந்தனனால்.

 

                                               (81-1)
 

853.

அப் போது அழல் வேள்வி அடல் பகைஞன்
வெப்பு ஏறிய வெங் கனல் போல வெகுண்டு,
‘இப் போர் தருக!’ என்ற இலக்குவன் மேல்
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால்.

 

                                               (85-1)
 

854.

சொரி வெங் கணை மாரி தொலைத்து, இரதம்
பரி உந்திய பாகு படுத்து, அவன் வெம்
பொரு திண் திறல் போக, இலக்குவன் அங்கு
எரி வெங் கணை மாரி இறைத்தனனால்.

 

                                              (85-2)
 

855.

முடிவுற்றனன். மாருதி மோதுதலால்,
கொடு வச்சிர, எயிற்றன் எனும் கொடியோன்;
விடம் ஒத்த பிசாசன் விறற் பனச-
னொடும் உற்று, இருவோரும் உடன்றனரால்.

 

                                              (92-1)
 

856.

பொர நின்ற பணைப் புயவன் பனசன்
நிருதன் களமீது நெருக்கி, அதில்
பரி வெள்ளம் அளப்பு இல பட்டு அழியத்
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால்.

 

                                              (92-2)
 

857.

பனசன் அயர்வுற்று ஒருபால் அடைய,
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெங்
கனல் என்ன வெகுண்டு, கவிப் படையின்
இனம் எங்கும் இரிந்திட, எய்தினனால்.

 

                                              (93-1)