பக்கம் எண் :

932யுத்த காண்டம் 

பற்றி, அங்கு அரக்கர் தானை வெள்ளம் அத்தனையும்
                                         பாரில்
அற்றவை அழிந்து சிந்த அறுத்து, ஒரு கணத்தில்
                                     மாய்த்தான்.
 

                                              (31-1)
 

864.

மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிரத் தோளான்;
தொடர்ந்தனர் அரக்கர், பின்னும்; தொடர்ந்தவர் தம்மை
                                       எல்லாம்
கடந்தனர், கவியின் வீரர்; களத்திடைக் கணத்தில்
                                     மாய்த்தார்;
நெடுந் திரைப் பரவைமீது நிறைந்தது, குருதி நீத்தம்.

 

                                              (38-1)
 

21. பிரமாத்திரப் படலம்
 

865.

தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்;
                                         தன்கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்;
                                         செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை
                                        நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய
                                        நோக்கும்.
 

                                              (25-1)
 

866.

ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான்.

 

                                              (77-1)
 

867.

இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,