அதிகாயன் பிரமனால் சாவாமையும் சலியாமையும் ஆகிய வரம் பெற்றவன். ஓவா - நீங்காத, ஒழியாத, இறையும் - சிறிதும், மூவா - கெடாத. மாதவம் - உரிச்சொல் தொடர், தேவாசுரர் - உம்மைத்தொகை, செய்செரு - வினைத்தொகை. |
(56) |
| 7783. | ‘கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை, திடமே உலகில் பல தேவரொடும், வட மேரு எடுக்க, வளர்த்தனனால். |
கடம் ஏய் கயிலைக் கிரி - காடுகள் பொருந்திய கயிலை மலையை; கண்ணுதலோடு இடம் ஏற எடுத்தனம் என்று - நெற்றிக் கண்ணையுடைய சிவபிரானோடு அடியோடு (நாம்) பெயர்த்து எடுத்தனம் என்பதற்காக; இவனைப் பல தேவரோடும் உலகில் திடமே வடமேரு எடுக்க - இவ்வதிகாயனைப் பல தேவர்களோடு உலகில் வலிமை மிக்க வடமேரு மலையை எடுக்க; வளர்த்தனன் - வளர்த்தான். |
கடம் - காடு, ஏய் - பொருந்திய, எடுத்தனம் - பன்மை சிறப்புக் குறித்து வந்தது. ஆல் - அசை. |
(57) |
| 7784. | ‘மாலாரொடு மந்தரம் மாசுணமும் மேலாகிய தேவரும் வேண்டும் எனா, ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய, காலால் நெடு வேலை கலக்கிடுமால்; |
மாலாரொடு மந்தரம் மாசுணமும் - (இவன்) திருமாலும் மந்தர மலையும் வாசுகி என்ற பாம்பும்; மேலாகிய தேவரும் வேண்டும் எனாது - சிறப்புடைத் தேவர்களும் (கடைவதற்கு உதவ) வேண்டும் என்னாது; ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய - ஆலகால நஞ்சும், அருமையான அமிழ்தமும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு; காலால் நெடுவேலை கலக்கிடும் - தன் காலாலேயே பெரிய பாற்கடலைக் கலக்க வல்லவன். |
கடைய வல்லவன் என்றபடி மாலார் - திருமால், மாசுணம் - பாம்பு (வாசுகி) வேலை - கடல். அமைதல் - வெளிப்படல். ஆல் - அசை. |
(58) |
| 7785. | ‘ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப் பாழித் திசை நின்று சுமந்த, பணைச் |