பக்கம் எண் :

96யுத்த காண்டம் 

பகை     ஆடிய வானவர் பல்வகை ஊர் - (இவ்வதிகாயனோடு)
பகைமை  கொண்ட தேவர்களின் பல  பகுப்புகள்  கொண்ட ஊர்களை;
புகை  ஆடிய  நாள் - (இவன்) சுட்டு எரிக்கத் தொடங்கிய காலத்தில்;
புனை  வாகையினான்  -  வெற்றிக்குறியாகிய வாகை மாலை அணிந்த
திருமால்;  மிகை  ஆர்  உயிர்  உண்  என  வீசிய  -  (இவனது)
தேவையற்ற  குற்றமுள்ள  இனிய  உயிரை  அழிப்பாய்  என்று  வீசிய;
வெந்தகை ஆழி தகைந்த  தனுத் தொழிலோன் - கொடிய தன்மை
பொருந்திய சக்கரப் படையைத் தடுத்த வில்லாற்றல் தொழில் உடையவன்
 

பல்வகை     ஊர்  பல  பகுப்புக்களைக்  கொண்ட  ஊர்  புனை
வாகையினான்  - வாகை மாலை புனைந்த திருமால். வெற்றிக் குறியாக
வாகை மாலை புனைதலை
 

இலைபுனை வாகை சூடி இகல் மலைந்து
அலை கடல் தானை அரசு அட்டு ஆர்ந்தன்று
 

என்ற     புறப்பொருளின்  வெண்பா  மாலைச்  சூத்திரம்  விளக்கும்.
மிகை  -  தேவையற்ற,  அழி  -  சுதர்சனம்   என்னும்  பெயருடைய
சக்கரம். தகைந்த - தடுத்த.
 

                                                  (61)
 

7788.‘உயிர் ஒப்பறு பல் படை உள்ள எலாம்,
செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள்,
அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்;
 

செயிர் ஒப்புறும் இந்திரர் - சினம் மிகக் கொண்ட இந்திரன்; உயிர்
ஒப்புறும்  உள்ள எலாம்  பல்  படை  -  தன்  உயிருக்கு ஒப்பாகக்
கூறத்தக்க  தன்னிடம் உள்ள பலவகையான படைக்கலங்களை; சிந்திய
நாள்
 -  (இவ்வதிகாயன்  மீது) செலுத்திய காலத்தில்; அயிர் ஒப்பன
நுண்துகள்   செய்து
  -  (இவன்  அப்படைக்கலங்களை)  மணலுக்கு
ஒப்பான  நுண்ணிய  பொடியாகச்  செய்து;  அவர்  தம் வயிரப்படை
தள்ளிய   வாளியினான்
 -  அந்த  இந்திரனின்  வச்சிராயு  தத்தை
வலியிலதாக்கிய அம்புகளை உடையவன்.
 

இந்திரர்     - ஒருமை பன்மையாகக் கூறப்பட்டது. இந்திரர் பலர்
எனலும்  உண்டு.  யாகம்  செய்து அடையும் பதவி ஆதலின் இந்திர
பதவிக்கு   வருவோர்   மாறிக்கொண்டு   வரும்   தன்மை   பற்றிப்
பன்மையால்  கூறினார்  எனலும்  ஆம்.  இந்திரர்  -  தேவர் எனக்
கொண்டு  பொருள் உரைப்பாருமுளர். அவ்வாறு உரைக்கின் பல்படை
சிந்தியவர்   தேவர்கள்   என்றும்,   வயிரப்  படை  செலுத்தியவன்
அவர்களின் தலைவனாகிய