பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 97

இந்திரன்     என்றும்  கொண்டு   பொருளுரைக்க.  தேவர்  படையை
நுண்துகள்   செய்து,   வயிரப்   படை  தள்ளிய   வாளியினான்  என
அமையும். அயிர் - மணல், வயிரப்படை - வச்சிராயுதம்.
 

                                                  (62)
 

7789.‘கறற்ான், மறை நூலொடு கண்ணுதல்பால்;
முற்றாதன தேவர் முரண் படைதாம்,
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்,
பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்;
 

கண்ணுதல்   பால் - நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் இடத்தில்;
மறை  நூலோடு  கற்றான்  -  வேதங்களையும்  போர்  நூல்களையும்
கற்றவன்; தேவர்  முற்றாதன முரண் படைதாம் - தேவர் (செலுத்திப்)
பழகாதனவாகிய வலிய படைக்கருவிகளை; மற்று ஆரும் வழங்கவலார்
இலவும்    பெற்றான்
   -    பிறர்   யாரும்   செலுத்த   வல்லவர்
இல்லாதனவுமாகிய   கருவிகளைப்   பெற்றான்;   நெடிது  ஆண்மை
பிறந்துடையான்
   -   (அதனால்)   மிகக்   ஆண்மை   தோன்றப்
பெற்றுள்ளான்.
 

முற்றாதன     - பழகாதன. தேவர் முற்றாதன என இயைக்க. மறை
நூல்  -  உம்மைத்  தொகை.  55  -  63  பாடல்களின் அதிகாயனது
பேராற்றல் கூறப்பட்டது.
 

                                                  (63)
 

7790.‘அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
மறன் அல்லது பல் பணி மாறு அணியான்;
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
"உறல் நல்லது, பேர் இசை" என்று உணர்வான்;
 

நல்லது  அறன்  அல்லது  மாறு   அறியான் - (இவ்வதிகாயன்)
நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்று அறிய மாட்டான்;
பல் பணி  மறன் அல்லது மாறு அணியான் -  பல அணிகலன்களாக
வீரத்தைத்  தவிர  வேறு  ஒன்றை அணிய மாட்டான்; திறன் அல்லது
ஓர்  ஆர்  உயிரும் சிதையான்
- வலிமை இல்லாததாகிய (எந்த ஒரு)
ஒப்பற்ற  அருமையான உயிரையும் அழிக்க மாட்டான்; பேரிசை உறல்
நல்லது என்று உணர்வான்
- பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது
என்று உணர்வான்.
 

அதிகாயனது     இப்பண்புகளைக் குறிப்பிட்டுள்ள படியால் அவன்
வீரப்போர்   செய்யும்  பெருவீரன்  என்பதையும்  மாயப்  போரைச்
சிறிதும்  விரும்பாதவன்  என்பதையும் நாமறியலாம். இதனை அடுத்த
பாடல்