பக்கம் எண் :

98யுத்த காண்டம் 

காட்டும்.    அறன்  அல்லது - அறநெறி  அன்றி, மாறு - வேறு, பணி
- அணிகலன். திறன் அல்லது ஓர் உயிர் - வலிமையற்றதாகிய ஓருயிர்.
 

                                                  (64)
 

7791.காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்,
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்,
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்.
 

காயத்து    உயிரே  விடு  காலையினும்  -  (இந்த  அதிகாயன்
போர்க்களத்தில்)  உடலின்  உள்ள உயிரையே விட வேண்டிய காலம்
வந்தாலும்; மாயத்தவர்   கூடி    மலைந்திடினும்   -   (தன்னோடு)
வஞ்சனைத்   தொழில்   செய்வார்   பலர்   கூடிப்  போரிட்டாலும்;
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் - உலகில் உள்ளவர்கள் எல்லாம்
(தனக்கு)  எதிராக  ஏமாற்றுப் (போரைச்) செய்தாலும்; மாயத் தொழில்
செய்ய  மதித்திலனால்
 -  மாயத்  தொழிலைச் செய்ய (எப்போதும்)
மதித்துக் கருத மாட்டான்.
 

அதிகாயன்    மாயத் தொழிலே செய்யாதவன் என்றவாறு. வான்மீகி
அதிகாயனை மாயம் உணர்ந்தவன் என்று கூறுவார். காயம் - உடம்பு.
64 - 65 பாடல்களில் அதிகாயனது பண்பு நலன் கூறப்பட்டது.
 

                                                  (65)
 

                                           அதிகாயன் வரலாறு
 

7792.‘மது கைடவர் என்பவர், வானவர்தம்
பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள்,

அதி கைதவர், ஆழி அனந்தனையும்,
விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார்.
 

அதி   கைதவர் - மிக்க வஞ்சனை உடையவரான; மது, கைடவர்
என்பவர்
 -  மது கைடவர் என்ற பெயருடைய தானவர்கள்; வானவர்
தம்  பதிகைகொடு கட்டவர்
 - தேவர்களுடைய ஊரைக் கைப்பற்றிச்
கொண்டு  அழித்தவராவர்; பண்டு  ஒருநாள் விதி கைம்மிக - முன்பு
ஒரு    காலத்தில்    விதியானது    மிகுதியாகத்    தூண்ட;   ஆழி
அனந்தனையும்  முட்டிய வெம்மையினார்
- பாற்கடலில் திருப்பள்ளி
கொண்டுள்ள   (கடவுளாகிய)   திருமாலையும்   எதிர்த்த  கொடுமை
உடையோராவர்.