பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 99

அதி     - மிகுதிப் பொருளை உணர்த்தும் ஒரு வடமொழி இடைச்
சொல்.  கைதவர்  - வஞ்சனை உடையவர். கட்டல் - அழித்தல், அழி
அனந்தன் - திருமால். கைம்மிக - மிகுதியாக.
 

                                                  (66)
 

7793.‘நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை,
"தாராய் அமர்" என்றனர், தாம் ஒரு நாள்;
ஆர் ஆழிய அண்ணலும், அஃது இசையா,
"வாரா, அமர் செய்க!" என வந்தனனால்,
 

தாம்  ஒருநாள் - (அவர்கள்) தாம் ஒருநாள்; நீர் ஆழி இழிந்து -
பாற்கடலில்    இறங்கி;   நெடுந்தகையை   -   பெருந்தன்மையுள்ள
திருமாலைப்  பார்த்து;  அமர்  தாராய்  என்றனர்  - போர் தருவாய்
என்றனர்;  ஆர் ஆழிய அண்ணலும் - வெலற்கரிய சக்கரப் படையை
ஏந்திய   தலைவனான  (திருமாலும்);  அஃது  இசையா  -  அதனை
ஏற்றுக்கொண்டு;  வாராஅமர்  செய்க  என்று  வந்தனனால்  - இது
வரையில்  நிகழ்ந்திராத  (கொடிய)  போரைச்  செய்க என்று சொல்லி
வந்தான்.
 

ஆழி -  கடல்.  இழிந்து  -  இறங்கி,  அமர் - போர், வாரா - இது
வரையில் நிகழ்ந்திராத.
 

                                                  (67)
 

7794.‘வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்,
நல்லார் முறை வீசி, நகும் திறலார்
மல்லால் இளகாது, மலைந்தனன் மால்;
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்.
 

வல்லார் உரு ஆயிரம் ஆய்வரினும் - வல்லமை உடையவர் உரு
ஆயிரம் கொண்டு  வந்தாலும்;  நல்வார் முறை வீசி நகும் திறலார் -
நன்மை     மிகுந்த     போர்    முறையால்    வீசிச்    சிரிக்கும்
வலிமையுடையவரான   (அந்த   மதுகைடபருடன்);   மால்  மல்லால்
இளகாது  மலைந்தனன்
 -  திருமால்  மற்போரினால் பின் வாங்காது
போரிட்டனன்;  அல் ஆயிரம்  ஆயிரம் அஃகினவால் - அங்ஙனம்
போர் புரிகை நாள்கள் ஆயிரம் கழிந்து போயின.
 

மல் - மற்போர், அல் - நாள், அஃகின - கழிந்து போயின.
 

                                                  (68)
 

7795.‘தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன்போல் ஒளிர் மேனியனை, "புகழோய்!