பக்கம் எண் :

12யுத்த காண்டம் 

எல்லை இல் ஆற்றலாய்! - எல்லை இல்லாத வல்லமையை
உடையவனே! கூற்றம் உன் எதிர் வந்து- கூற்று உன் எதிரில்
வந்து; உயிர் கொள்வது ஓர் ஊற்றம் தான் உடைத்து அன்று -
உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையதன்று; எனையும்
ஒளித்து   ஏற்ற   எவ்உலகு   உற்றனை?'
- (ஆதலால் நீ
இறந்திருக்க   மாட்டாய்   உனக்கு  ஏற்ற எந்த உலகத்துக்கோ
சென்றிருக்கின்றாய்)  எனக்குத்  தெரியாமல்;  மறைந்து  உனக்கு
ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய்?' என்று உரைக்கும் ஆங்கு
ஓர் தலை
- என்று வினவும் அங்கு ஒருதலை.
 

இது இராவணின் பத்தாவது தலை கூறுவது. 
 

(22)
 

இராவணன், மைந்தன் உடலைத் தேடிக் களம் புகுதல்
 

9208.

இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து, 

உன்னும் மாத்திரத்து ஓடினன், ஊழி நாள் 

பொன்னின் வான் அன்ன போர்க்களம் புக்கனன், 

நன் மகன்தனது ஆக்கையை நாடுவான். 

 

இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து- இவ்வாறு
இந்திரசித்தனை   அழைத்து   ஏங்குகின்ற   இராவணன் எழுந்து;
உன்னும்   மாத்திரத்து   ஓடினன் -   நினைக்கும்   அளவில்
ஓடிச்சென்று; ஊழிநாள் பொன்னின் வான் அன்ன போர்க்களம்
- ஊழி   இறுதியில்   தோன்றும்  பொன்னிறமுடைய  செவ்வானம்
போன்று   குருதியால்   சிவந்து  காட்டும் போர்க்களத்தில்; தனது 
நன்மகன்  ஆக்கையை  நாடுவான் புக்கனன்
- தனது சிறந்த
புதல்வனுடைய உடம்பைத் தேடுவதற்காகப் புகுந்தான்.
 

(23)
 

9209.

தேவரே முதலாகிய சேவகர் 

யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார், 

'மூவகைப் பேர் உலகின் முறைமையும் 

ஏவது ஆகும்?' என்று எண்ணி இரங்குவார். 

 

தேவரே முதலாகிய சேவகர் யாவரும் - தேவர் முதலிய
பணியாளர்கள்  யாவரும்;  உடனே  தொடர்ந்து  ஏகினார் -
இராவணனுடனே தொடர்ந்து சென்றவர்களாய்; மூவகைப் பேர்
உலகின்    முறைமையும்
-   (இராவணனின்   கோபத்தால்)
மூவுலகங்களின் முறைமையும்; ஏவது ஆகும்?' என்று எண்ணி