பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்13

இரங்குவார் - 'இனி என்னாகுமோ?' என்று எண்ணி இரங்குவாராயினர். 
  

(24)
 

9210.

அழுதவால் சில; அன்பின போன்று, அடி 

தொழுதவால் சில; தூங்கினவால் சில; 

உழுத யானைப் பிணம் புக்கு ஒளித்தவால் - 

கழுதும் புள்ளும், அரக்கனைக் காண்டலும்.* 

 

கழுதும் புள்ளும் அரக்கனைக் காண்டலும்- (போர்க்களத்தில் 
பிணங்களைத்  தின்று  கொண்டிருந்த)  பேய்களும்   கழுகு முதலிய 
பறவைகளும்   இராவணனைக்  கண்டவுடனே;  சில  அழுத, சில 
அன்பின போன்று அடி தொழுத
- அஞ்சிச்  சில அழுதன, சில 
அவன்பால் அன்பு கொண்டவை போலத் தொழுதன; சில தூங்கின, 
உழுத யானைப் பிணம்புக்கு ஒளித்த
- (பொய்யாகச்) சில தூங்கின 
(சில) ஆனைப் பிணங்களைத் தலையால் உழுது வழி செய்து கொண்டு 
புகுந்து ஒளிந்து கொண்டன.
 

கழுது - பேய், புள் - கழுகு முதலான பறவைகள், அசைநிலைகள்.
   

(25)
 

9211.

கோடி கோடிக் குதிரையின் கூட்டமும், 

ஆடல் வென்றி அரக்கர்தம் ஆக்கையும், 

ஓடை யானையும், தேரும், உருட்டினான், 

நாடினான், தன் மகன் உடல், நாள் எலாம்.* 

 

தன் மகன் உடல் நாடினான் - (இராவணன்)   தன் உடலைத்
தேடுபவனாய்; கோடி  கோடிக்  குதிரையின் கூட்டமும் - கோடி
கோடிக்    குதிரைப்   பிணங்களின்   கூட்டங்களையும்;   ஆடல்
வென்றி அரக்கர்தம் ஆக்கையும்
- வலிமையும் வெற்றியுமுடைய
அரக்கர்  தம்  உடம்புகளையும்;  ஓடை யானையும் தேரும் - முக
பட்டத்தை  உடைய  யானைப் பிணங்களையும் தேர்களையும்; நாள்
எலாம் உருட்டினான்
-  ஒருநாள் முழுவதும் புரட்டிப் புரட்டிப்
பார்த்தான். 
 

(26)
 

9212.

மெய் கிடந்த விழி வழி நீர் விழ, 

நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான், 

மொய் கிடந்த சிலையொடு மூரி மாக் 

கய் கிடந்தது கண்டனன், கண்களால்.