பக்கம் எண் :

14யுத்த காண்டம் 

மெய் கிடந்த விழி வழி நீர்விழ- உடம்பில் பொருந்திய
(பத்துத் தலைகளிலும் உள்ள)   இருபது விழிகளிலும் நீர் உழுக;
நெய்   கிடந்த  கனல்புரை  நெஞ்சினான் - நெய் பெய்த
நெருப்புப் போல எரியும் நெஞ்சினையுடைய இராவணன்; மொய்
கிடந்த  சிலையொடு  மூரிமாக்கய்
-  வலிமை  பொருந்திய
வில்லோடு வலிய பெரிய கை; கிடந்தது கண்டனன் கண்களால்-
போர்க்களத்தில் விழுந்து கிடந்ததைக் கண்களால் கண்டான்.
 

கை என்பது எதுகை நோக்கிக் 'கய்' எனப் போலியாயிற்று.
  

(27)
 

9213.

பொங்கு தோள்வளையும் கணைப் புட்டிலோடு 

அங்கதங்களும் அம்பும் இலங்கிட, 

வெங் கண் நாகம் எனப் பொலி வெய்ய கை 

செங் கையால் எடுத்தான், சிரம் சேர்த்தினான். 

 

பொங்க   தோள்வளையும்  கணைப்புட்டிலோடு- ஒளி
விளங்குகின்ற   தோள்    வளையும்   அம்புப்   புட்டிலோடு; 
அங்கதங்களும்   அம்பும்   இலங்கிட- வாகுவலயங்களும் 
அம்பும் விளங்கிட; வெங்கண் நாகம் எனப் பொலிவெய்யகை-
கொடுங்கண்ணையுடைய நாகம் போலப் பொலிகின்ற இந்திரசித்தின் 
விரும்பத்தக்க   கையை;   செங்கையால்  எடுத்தான், சிரம் 
சேர்த்தினான்
-  இராவணன் தன் சிவந்த கையால் எடுத்துத் 
தலைமேல் வைத்துக் கொண்டான்.
 

அங்கதம் -  வாகுவலயம்.  கொடுமையும் வடிவும் தோன்ற
இந்திரசித்தின்   கையினுக்கு   வெங்கண்   நாகம்   உவமை
கூறப்பெற்றது.   புத்திர   பாசத்தால்  துடிக்கும்  இராவணன்
இந்திரசித்தின் கையினைக் கண்டவுடன் பேரன்பின் காரணமாக
அதனை ஒரு புனிதப் பொருளினைப் போலச் சிரமிசை வைத்துக்
கொள்ளுகின்றான். 
 

(26)
 

9214.

கல் திண் மார்பில் தழுவும்; கழுத்தினில் 

சுற்றும்; சென்னியில் சூட்டும்; சுழல் கணோடு 

ஒற்றும்; மோந்திட்டு உருகும்; உளைக்குமால்; 

முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான். 

 

முற்றும்  நாளின்  விடும் நெடுமூச்சினான்- (மேலும்) ஆயுள்
முடியும்நாளில் விடுகின்றது போன்ற நீண்ட மூச்சினையுடையவனாகிய 
இராவணன் (அக்கையினை); கல்திண் மார்பில் தழுவும் கழுத்தினில் 
சுற்றும்
- மலை போன்ற மார்பில் தழுவுவான் பின்