பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்15

கழுத்தினில் (மாலைபோலச்) சுற்றுவான்; சென்னியில் சூட்டும்; 
சுழல்   கணோடு   ஒற்றும்
-   தலையில்   (கண்ணிபோல)
சூட்டுவான்   சுழல்கின்ற   தன்  கண்களிலே வைத்து ஒற்றிக்
கொள்வான்; மோந்திட்டு உருகும்; உளைக்கும்- அதைத்தன்
மூக்கில் வைத்து மோந்து பார்த்து மனம் உருகுவான்; வருந்துவான்.
 

முற்றும் நாள் - இறக்கும் நாள், ஆல் - அசை 
  

(29)
 

9215.

கை கண்டான், பின் கருங் கடல் கண்டென, 

மெய் கண்டான், அதன்மேல் விழுந்தான்அரோ - 

பெய் கண் தாரை அருவிப் பெருந் திரை, 

மொய் கண்டார் திரை வேலையை மூடவே. 

 

கை கண்டான்- இந்திரசித்தனின் கையைக் கண்ட இராவணன்;
பின்   கருங்கடல்   கண்டென   மெய்   கண்டான்- பின்பு
கருங்கடலைக்  கண்டாற்  போன்ற அவன் உடம்பினைக் கண்டான்;
பெய்   கண்  தாரை   அருவிப் பெருந்திரை- கண்கள் தாரை
தாரையாகப் பொழிகின்ற கண்ணீர் அருவியின் பெரிய அலைகள்; 
மொய் கண்டார் திரை வேலையை மூடவே
- வலிமை கொண்டு 
ஆரவாரிக்கின்ற அலைகளோடு கூடிய கடலையும் சென்று மூடுமாறு; 
அதன்மேல் விழுந்தான் அரோ!
- அழுதுகொண்டு அவ்வுடம்பின் 
மீது விழுந்தான்.
 

கைகண்டான் - வினையால் அணையும் பெயர். இங்கு இராவணனை
உணர்த்தியது. கருங்கடல் - கருமையும்   பரப்பும் பற்றி இந்திரசித்தின் 
உடம்பிற்கு   உவமையாயிற்று.    மொய் -  வலிமை,   ஆர்திரை - 
வினைத்தொகை. அரோ - அசை.
  

(30)
 

9216.

அப்பு மாரி அழுந்திய மார்பைத் தன் 

அப்பு மாரி அழுது இழி யாக்கையின் 

அப்பும்; மார்பில் அணைக்கும்; அரற்றுமால்; 

அப் புமான் உற்றது யாவர் உற்றார்அரோ! 

 

அப்பு மாரி அழுந்திய மார்பை - அம்பு மாரி அழுந்தி இருந்த
இந்திரசித்தின் மார்பை; அப்புமாரி அழுது இழி தன் யாக்கையின் 
- அழுது   அழுது   கண்ணீர் மாரி  இழிகின்ற தன் உடம்பின் கண்; 
அப்பும், மார்பில் அணைக்கும் அரற்றுமால்
- ஒற்றிக் கொள்வான். 
பின் மார்பில் அணைத்துக் கொள்வான்; வாயால் அரற்றுவான்;
அப்புமான் உற்றது யாவர் உற்றார் - அந்த ஆண்மையுள்ள