இராவணன் உற்ற துன்பம் இவ்வுலகில் யாவர் அடைந்திருக்கின்றார்கள்! |
'அம்புமாரி', 'அப்புமாரி' எனத் தம்மின வன்தொடராயிற்று. இரண்டாவது அப்புமாரி கண்ணீர் மழை என்ற பொருளது. அப்புதல் - ஒற்றிக்கொள்ளுதல் புமான் - ஆடவன் என்ற பொருளுடைய வடசொல். |
இச்செய்யுளில் நான்கடியினும் முதற்சீர் முழுமையும் ஒத்து வந்தமையால் 'யமகம்' என்னும் சொல்லணி அமைந்தது. |
(31) |
| 9217. | பறிக்கும், மார்பின் பகழியை; பல் முறை |
| முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்குமால்; |
| 'எறிக்கும் வெங் கதிரோடு உலகு ஏழையும் |
| கறிக்கும், வாயில் இட்டு, இன்று' எனக் காந்துமால். |
| |
மார்பின் பகழியைப் பறிக்கும் - (இந்திரசித்தின்) மார்பில் தைத்திருக்கும் அம்புகளை அவன் மார்பிலிருந்து (இராவணன்) பறிப்பான்; பல்முறை முறிக்கும்; மூர்ச்சிக்கும்; மோக்கும்; முயங்கும் - அவற்றைப் பல முறை முறிப்பான்; பின்பு மூர்ச்சையுறுவான்; பின் மூக்கில் வைத்து மோந்து பார்ப்பான்; பின் மார்பில் அணைப்பான்; எறிக்கும் வெங்கதிரோடு உலகு ஏழையும் - வெயில் வீசும் வெப்பமுள்ள சூரியனோடு உலகம் ஏழினையும்; வாயில் இட்டு இன்று கறிக்கும் எனக் காந்தும் - வாயில் இட்டு இன்று கறிப்போம்' என்று வெகுள்வான். |
இந்திரசித்தின் மார்பில் தைத்திருந்த அம்புகளைப் பறித்தலும், முறித்தலும் செய்தது. அவன் உயிரை வாங்கியதே என்னும் வெறுப்பினாலாம். கறித்தல் - கடித்தல். கறிக்கும் என்பது உம்மீற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று. ஆல் - அசைகள். |
(32) |
| 9218. | தேவரோடு முனிவரும், சீரியோர் |
| ஏவரோடும், இடம் இன்றி நின்றவன் - |
| 'மூவரோடும், உலகு ஒரு மூன்றொடும் |
| போவதேகொல், முனிவு?' எனும் பொம்மலான். |
| |
தேவரோடு - தேவர்களோடு; முனிவரும், சீரியோர் ஏவரோடும்- முனிவர்களும், சிறந்துள்ள ஏவரோடும்; இடம் இன்றி நின்றவன் முனிவு -சமானமின்றி நின்றவனாய இராவணன் சீற்றம்; மூவரோடும் உலகு ஒரு மூன்றோடும் - மும்மூர்த்திகளோடும் மூன்று உலகினோடும்; போவதே கொல்? எனும் |