பொம்மலான் - போய் விடக்கூடியதோ? எனும் (அச்சத்தை ஏற்படுத்தும்) பெருஞ்சீற்றமுடையவனானன். |
(33) |
இந்திரசித்தின் தலைகாணாது இராவணன் அரற்றுதல் |
9219. | கண்டிலன் தலை; 'காந்தி, அம் மானிடன் |
| கொண்டு இறந்தனன்' என்பது கொண்டவன், |
| புண் திறந்தன நெஞ்சன், பொருமலன், |
| விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: |
| |
தலை கண்டிலன், காந்தி - (இந்திரசித்தின் கையையும் உடம்பையும் கண்ட இராவணன்) தலையைக் காணாதவனாய் மனம் எரிந்து; அம் மானிடன் கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் - அம்மனிதன் (இலக்குவன்) எடுத்துச் சென்றனன் என்று அறிந்துகொண்டு; புண்திறந்தன நெஞ்சன் பொருமலன் - புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு பொருமுகின்ற இராவணன்; விண்திறந்திட, விம்மி, அரற்றினான்- விண்முகடு பிளக்குமாறு விம்மி விம்மி வாய்திறந்து அரற்றலானான். |
காந்துதல் - சினத்தல், இறத்தல் - கடத்தல். பொருமுதல் - விம்முதல் - துன்பமுறல் எனினுமாம். |
(34) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
| 9220. | 'நிலையின் மாதிரத்து நின்ற யானையும், நெற்றிக் |
| கண்ணன் |
| மலையுமே, எளியவோ, நான் பறித்தற்கு? மறு இல் |
| மைந்தன் |
| தலையும் ஆர் உயிரும் கொண்டார்அவர் உடலோடும் |
| தங்க, |
| புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் |
| போலும்! |
| |
நிலையின் மாதிரத்து நின்ற யானையும்- நிலைத்துள்ள எட்டுத் திசையிலும் நின்ற யானைகளும்; நெற்றிக்கண்ணன் மலையுமே- நெற்றிக்கண்ணை உடைய சிவன் தங்கியுள்ள கயிலை மலையுமே; நான் பறித்தற்கு எளியவோ?- யான் பறித்தற்கு எளிய ஆயினவோ? (இம்மானிடர் எளியரல்லரோ); மறுஇல் மைந்தன் |