பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்175

சங்குகளை;  கொன்னே  ஊதி- அச்சம் தோன்றுமாறு ஊதி;
தோள் புடை  கொட்டிக்கொடு- தோள்களைப் பக்கமாகக்
கொட்டிக்கொண்டு;   சார்ந்தார்-   போர்    செய்ய   வந்து
சேர்ந்தனர்; வையம் என் ஆம்- நிலவுலகம் என்ன ஆகுமோ;
என் படும் வானம் - வானுலகம் என்ன பாடு படப்போகிறதோ;
திசை ஏதாம் - (நிலை பெற்றுள்ள) திசைகள்தான் என்ன
ஆகுமோ?
 

(187)
 

9486.

ஆர்த்தார் அன்னார்; அன்ன கணத்தே, அவர்

ஆற்றல்

தீர்த்தானும் தன் வெஞ் சிலை நாணைத்

தெறிப்புற்றான்;

பேர்த்தான் பொன் - தோள்; முற்றும் அளந்தான் பிறழ்

சங்கம்

ஆர்த்தால் ஒத்தது, அவ் ஒலி, எல்லா உலகுக்கும்.
 

அன்னார்- அந்த அரக்கர்கள்; ஆர்த்தார் - ஆரவாரம்
செய்தார்கள்; அன்ன கணத்தே- அந்தக் கணத்திலேயே; அவர்
ஆற்றல் தீர்த்தானும்
- அவர்களின் ஆற்றலை அழித்தவனாகிய
இராமனும்; தன் வெஞ்சிலை   நாணைத்   தெறிப்புற்றான்-
தன்னுடைய கொடிய வில்லின் நாணைத் தெறித்தான்; அவ் ஒலி
- அப்போது எழுந்த ஒலியானது; பொன் தாள் பேர்த்தான்-
தன் பொற்கால்களைப்  பெயர்த்தவனாய்; முற்றும் அளந்தான்
- எல்லா உலகங்களையும்  அளந்தவனாகிய திருமால் (கரத்தில்
ஏந்தும்); பிறழ் சங்கம் -  விளங்குகின்ற சங்கு; ஆர்த்தால்
ஒத்தது
- ஆரவாரித்ததைப் போன்றிருந்தது.
 

(188)
 

கலி விருத்தம் (வேறு)
 

9487.

பல் ஆயிர கோடியர்; பல் படை நூல்
வல்லார்; அவர் மெய்ம்மை வழங்க வலார்;
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர்; அரக்கரின் மேதகையார்.
 

அரக்கரில் மேதகையார்- அரக்கரிலே மேம்பட்டவராகிய
அவர்கள்; பல் ஆயிர கோடியர்- பல ஆயிரம் கோடிப் பேர்;
பல் படை நூல் வல்லார்- பலவாகிய படைக்கலக் கலையில்