| கண் தீயும், ஒருங்கு கலந்து எழலால், |
| உள் தீ உற வெந்தன, ஏழ் உலகும். |
|
விட்டீய- (பகைவர்கள் களத்தை) விட்டோடுமாறு; வழங்கிய வெம்படையின் - செலுத்தப்பட்ட கொடிய படைக்கலங்கள்; சுட்டீய- சுடும்படியாக; நிமிர்ந்த சுடர்ச் சுடரும்- ஓங்கி வளர்ந்த சுடருடைய நெருப்பும்; கண் தீயும்- (கோபத்தால்) கண்ணிலிருந்து தோன்றும் கோபத்தீயும்; ஒருங்கு கலந்து எழலால்- ஒன்றாகச் சேர்ந்து மேல் எழுவதனால்; ஏழ் உலகும் - ஏழு உலகங்களும்; தீ உள் உற வெந்தன- நெருப்பு உள்புகுந்து மிகுவதால் வெந்தன. |
(192) |
9491. | தேர் ஆர்ப்பு ஒலி, வீரர் தெழிப்பு ஒலியும், |
| தார் ஆர்ப்பு ஒலியும், கழல் தாக்கு ஒலியும், |
| போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும், |
| காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும். |
|
தேர் ஆர்ப்பு ஒலி- (ஓடும்) தேர்களின் ஆரவாரமான ஒலியும்; வீரர் தெழிப்பு ஒலியும்- போர் வீரர்கள் அதட்டுகின்ற ஒலியும்; தார் ஆர்ப்பு ஒலியும்- கிண்கிணி மாலைகளின் ஆரவார ஒலியும்; கழல் தாக்கு ஒலியும்- வீரக் கழல்கள் மோதுதலால் எழுகின்ற ஒலியும்; போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும்- போருக்கெனப் பொருந்திய வில்லின் நாணினைத் தெறித்தலால் எழுகின்ற ஒலியும்; காரால் பொலியும் - கருநிறத்தோடு அழகாக விளங்குகின்ற; களிறு ஆர்ப்பு ஒலியும்- யானைகளின் ஆரவார ஒலியும் (போர்க்களத்திலே கலந்து ஒலித்தன;) |
(193) |
இராமபிரான் கணையால் அரக்கர் சேனை அழிதல் |
9492. | 'எல்லாரும் இராவணனே அனையார்; |
| வெல்லா உலகு இல்லவர்; மெய் வலியார்; |
| தொல்லார் படை வந்து தொடர்ந்தது' எனா, |
| நல்லானும் உருத்து, எதிர் நண்ணினனால். |
|
எல்லாரும் இராவணனே அனையார் - எதிரே தோன்றும் எல்லோருமே (தனித்தனியாக) இராவணனை நிகர்த்தவர்கள்; வெல்லா உலகு இல்லவர்- வெற்றி கொள்ளாத உலகம் என எதுவும் |