பக்கம் எண் :

178யுத்த காண்டம் 

இல்லாதவர்கள் (அதாவது எல்லா உலகங்களையும் வென்றவர்கள்);
மெய் வலியார் - உடல் வலிமை கொண்டவர்கள்; எனா- என்று
எண்ணி; எதிர்  நண்ணினன்- அரக்கருக்கு  எதிராக  (இராமன்)
நெருங்கினான்.
 

(194)
 

9493.

ஊழிக் கனல் போல்பவர் உந்தின போர்
ஆழிப் படை அம்பொடும் அற்று அகல,
பாழிக் கடை நாள் விடு பல் மழை போல்
வாழிச் சுடர் வாளி வழங்கினனால்.
 

ஊழிக்கனல் போல்பவர்- உலக அழிவுக்குரிய பிரளய காலத்து
நெருப்பைப்   போன்றவராகிய அரக்கர்கள்;   உந்தின-   செலுத்திய;
ஆழிப்படை அம்பொடும் அற்று அகல- சக்கராயுதமும்   அம்பும்
சிதைந்து ஒழியும்படி; கடைநாள் விடு பல் மழை போல்- யுகாந்தத்தில்
(உலக இறுதிநாளில்) பெய்யும் பெருமழை போல;   பாழி- வலிமைமிக்க;
சுடர் வாளி - ஒளி பொருந்திய அம்புகளை; வழங்கினன்- இராமபிரான்
எய்தான்.
 

வாழி, ஆல் - அசைகள்.
 

(195)
 

9494.

சூரோடு தொடர்ந்த சுடர்க் கணைதான்
தாரோடு அகலங்கள் தடிந்திடலும்
தேரோடு மடிந்தனர், செங் கதிரோன்
ஊரோடு மறிந்தனன் ஒத்து, உரவோர்.
  

சூரோடு தொடர்ந்த- கொடுமையைப்   பரப்பிக்கொண்டு வந்த;
சுடர்க்   கணை- ஒளி  கொண்ட  (இராம)   பாணங்கள்; தாரோடு
அகலங்கள்   தடிந்திடலும்
-   மலைகளோடு  அவற்றை அணிந்த
மார்புகளை   அறுத்திடலும்; செங்கதிரோன்- சூரியன்;    ஊரோடு
மறிந்தனன் ஒத்து
- தன்னைச் சூழ்ந்த ஊர்கோளோடு விழுந்தவனைப்
போல; உரவோர்- வலிய அரக்கர்கள்;   தேரோடு  மடிந்தனர்  -
தாங்கள் ஏறி  வந்த   தேரோடு மடிந்தார்கள்.
 

(196)
 

9495.

கொல்லோடு சுடர்க் கணை கூற்றின் நிணப்
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்,
செல்லோடு எழு மா முகில் சிந்தினபோல்,
வில்லோடும் விழுந்த, மிடல் கரமே.