பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்179

கொல்லோடு சுடர்க்கணை- கொல்லுதல் தொழிலோடு கூடிய
ஒளிமிக்க அம்புகள்; கூற்றின்- யமனுடைய; நிணப் பல்லோடு
- கொழுப்புத்   தசை    படிந்த    பல்லோடு;   தொடர்ந்தன
பாய்தலினால்
   -    தொடர்ந்து   பாய்வதால்; மிடல் கரம்-
அரக்கரின் வலிமை வாய்ந்த கைகள்;   செல்லோடு எழு- இடி
மின்னலோடு   எழுகின்ற;   மாமுகில்- பெரிய    மேகங்கள்;
சிந்தின போல்     -    சிந்தியதைப்    போல; வில்லோடும்
விழுந்த
- பிடித்திருந்த வில்லோடு விழுந்தன.
 

செல் - (இங்கே) மின்னல்.
 

(197)
 

9496.

செம்போடு உதிரத் திரை ஆழியின்வாய் -
வெம்பு ஓடு அரவக் குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த - குறைந்து,
அம்போடும் விழுந்த அடல் கரமே.
 

குறைந்து அம்போடும் விழுந்த- துணிக்கப்பட்டு அம்போடு
விழுந்த; அடல் கரம்- வலிய கைகள்;    செம்போடு உதிரத்
திரை ஆழியின் வாய்
- சிவந்த நிறத்தோடு குருதியாகிய அலை
கடலிலே; மேல்    நிமிரும்   - மேல் நோக்கி வளர்கின்ற;
கொம்போடும்      விழுந்தன    -    மரக்கிளைகளோடு
விழுகின்றனவாகிய;  வெம்பு    ஓடு    அரவக்குலம் ஒத்த-
சினங்கொண்டு ஓடும் பாம்புக் கூட்டங்களை ஒத்தன.
 

(198)
 

9497.

முன் ஓடு உதிரப் புனல், மூதுலகைப்
பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என,
பொன் ஓடை நெடுங் கரி புக்கனவால்.
 

மூதுலகைப் பின் ஓடி வளைந்த பெருங் கடல்வாய்- பழமையான
உலகத்தைச்    சூழ்ந்து வளைத்துக்கொண்ட   கடலிலே; மின்னோடும்
- மின்னலோடும்;  விழுந்தன மேகம் என- விழுந்தனவாகிய மேகம்
போல; முன் ஓடும்   உதிரப்   புனல்- முற்பட்டுப் பாய்கின்ற குருதி
வெள்ளத்திலே; பொன் ஓடை நெடுங் கரி புக்கன- பொன்மயமான
நெற்றிப்பட்டம் சூட்டப்பெற்ற பெரிய யானைகள் புகுந்தன.
 

ஆல் : அசை.
 

(199)