தலையும் ஆர் உயிரும் கொண்டார்- குற்றமற்ற என் மகன் தலையையும் அரிய உயிரையும் கொண்டவர்; அவர் உடலோடும் தங்க- தமது உடலோடும் (இன்னும் உயிர்விடாமல்) தங்கி இருக்க; புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும்- இழிவுடையவனாகிய யான் உயிர் சுமந்திருக்கின்றேன் போலும்! போலும்! |
மாதிரம் - திசை, மறு - குற்றம், போலும் - ஒப்பில் போலி; உரையசைப் பொருளில் வந்தது. |
(35) |
| 9221. | 'எரி உண அளகை மூதூர், இந்திரன் இருக்கை |
| எல்லாம் |
| பொரி உண, உலகம் மூன்றும் பொது அறப் |
| புரந்தேன் போலாம்! |
| அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை |
| யாக்கை |
| நரி உணக் கண்டேன்; ஊணின், நாய் உணும் |
| உணவு நன்றால்! |
| |
அளகை மூதூர் எரிஉண- குபேரனுக்கு உரிமையான அளகை என்னும் பழமையான ஊர் எரியுண்ணவும்; இந்திரன் இருக்கை எல்லாம் பொரி உண- இந்திரன் இருப்பிடமாகிய அமராவதி தீயில் பொரிந்து போகவும் செய்து; உலகம் மூன்றும் பொது அறப் புரந்தேன் போலாம் - உலகம் மூன்றும் பிறர்க்கும் பொது என்பது இல்லாமல் (எனக்கே உரிமையாக்கிக்) காப்பாற்றினேன் போலும்! அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை - வண்டுகள் தேனை உண்கின்ற மாலையை அணிந்த தலையை இழந்த என் புதல்வனது உடம்பை; நரி உணக் கண்டேன்; ஊணின் நாய் உணும் உணவு நன்றால்- நரி உண்ணக் கண்டேனாகிய யான் உண்ணும் உணவைக் காட்டிலும் (தான் கக்கியதையே உண்கின்ற) நாய் உண்ணும் (எச்சில்) உணவு சிறந்ததாகும். |
(36) |
| 9222. | 'பூண்டு, ஒரு பகைமேல் புக்கு, என் புத்திரனோடும் |
| போனார் |
| மீண்டிலர் விளிந்து வீழ்ந்தார்; விரதியர் இருவரோடும் |