கோடலின்- நேராக எதிர்த்துக் கொலை செய்வதில்; மன்- தலைவனாகிய இராமன்; குறிகோள் உறுமேல்- குறிக்கொள்வானாதலின்; சிலை கோடியதோறும் - இராமனின் வில் வளையும் போதெல்லாம்; சிரத்திரள் வன் மலை- அரக்கர் தலைகளின் கூட்டமாகிய மலைத் திரள்; கோடியின் மேலும் மறிந்திடும்- கோடிக்குமேல் விழும். |
(205) |
9504. | திண் மார்பின்மிசைச் செறி சாலிகையின் - |
| கண், வாளி கடைச் சிறை காண நுழைந்து, |
| எண் வாய் உற மொய்த்தன, இன் நறை உற்று |
| உண் வாய் வரி வண்டுஇனம் ஒத்தனவால். |
|
திண் மார்பின் மிசை- திண்ணிய மார்பின்மீது; செறி - செறிந்துள்ள; சாலிகையின் கண்- கவசத்திலே; வாளி - அம்பினது; கடைச் சிறை- இறுதிப் பகுதியாகிய சிறகுகள்; காண நுழைந்து- (தைத்தபிறகும் வெளியே) காணும்படியாக உட்புகுந்து; எண் வாய் அற மொய்த்தன- (காலி இடம் உண்டா என) எண்ணுதற்கு இடம் அற்றுப் போகும்படியாக மொய்த்தவை; இன் நறை உற்று- இனிய தேனடையினை அடைந்து; உண் வாய்- அதனை உண்ணும் வாயினை உடைய; வரி வண்டினம் ஒத்தன- அழகிய வண்டுகளின் கூட்டத்தைப் போன்று இருந்தன. |
(206) |
திகைப்பூட்டும் வகையில் இராமன் சாரி திரிதல் |
9505. | பாறு ஆடு களத்து, ஒருவன், பகலின் |
| கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே |
| நூறு ஆயின யோசனை, நூழில்களம் |
| மாறாது உழல் சாரிகை வந்தனனால். |
|
பாறு ஆடு களத்து - பருந்துகள் பறக்கின்ற போர்க்களத்தில்; பகலின் கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே - பகற் பொழுதின் நான்கில் ஒரு பங்காகிய காலப் பகுதியிலே; நூறு ஆகிய யோசனை- நூறு யோசனைப் பரப்பினதாக இருந்த; நூழில் களம் - பகைவரைக் கொன்று குவிப்பதற்கு உரிய களத்திடையே; ஒருவன்- தனி ஒருவனாகிய இராமபிரான்; மாறாது- பிறழ்ச்சி இல்லாமல்; உழல் சாரிகை வந்தனன்- சுழலும் சாரிகை திரிந்தான். |
(207) |