பக்கம் எண் :

184யுத்த காண்டம் 

இரவு அன்று இது- (இது நிசாசரராகிய நமக்கு ஏற்ற) இரவு
அன்று இது; ஓர்   பகல்- பகல்   நேரமாகும்; என்பர்கள்-
என்று  தமக்குள்   சொல்லிக்கொள்வார்கள்; ஒருவன்   என
உன்னும்  உணர்ச்சி இலார்
-   தங்கள்    அனைவரையும்
எதிர்த்துப் போர்    செய்பவன்  ஒருவன்தான் என்று கருதும்
உணர்ச்சி அற்றவர்களாய்; கரவு அன்று இது- இது வஞ்சனைப்
போர் அன்று; இராமர் கணக்கு இலர்- எத்தனை இராமர்கள்
என்று அளவிட முடியாத அளவுக்கு இராமர்கள் பலராவர்; பரவை
மணலின்   பலர் என்பார்கள்  
-    கடல்    மணலை விட
அதிகமானவர்கள் இராமர்கள் என்று சொல்லிக்
கொள்வார்கள்.
  

(210)
 

9509.

ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்;
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே;
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்,
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ?*
 

ஒருவன் ஒருவன் மலைபோல் உயர்வோன்- அரக்கர்
சேனையில் உள்ள ஒவ்வொருவனும் மலைபோலப் பெரிய உருவம்
உடையவன்; ஒருவன் படை ஒப்பற்ற ஒருவனாகிய இராவணன்
கொண்ட படையோ வெள்ளம் ஓர் ஆயிரமே
- ஓர் ஆயிர
வெள்ளமாகும்; ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் - ஓர்
அரக்கன் மற்றோர் அரக்கனின் உயிரை உண்டான் என்பதல்லாமல்;
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ- இராமனாகிய ஒருவன்
உயிரை அவர் கொண்டனர் என உண்டா? (இல்லை)
 

(211)
 

9510.

தேர்மேல் உளர்; மாவொடு செந் தறுகண்
கார்மேல் உளர்; மா கடல்மேல் உளர்; இப்
பார்மேல் உளர்; உம்பர் பரந்து உளரால் -
போர்மேலும் இராமர் புகுந்து அடர்வார்.
 

இராமர்... தேர்மேல் உளர்-   தேரின்மேல்   இருக்கிறார்;
மாவொடு-  குதிரையோடு; செந்தறு   கண் கார்மேல் உளர்-
செந்நிறங்கொண்டு   அழிக்கின்ற   கண்ணினையுடைய    கரிய
மேகமனைய   யானைமேல் இருக்கிறார்; மா  கடல்மேல் உளர்-
பெரிய கடல்மேல் இருக்கிறார்; இப் பார் மேல் உளர்- இந்த