நிலத்தின்மேல் இருக்கிறார்; உம்பர் பரந்து உளர் - வானத்தில் பரவி இருக்கிறார்; போர்மேலும் புகுந்து- (இத்தனை இடத்தில் இருப்பதோடு) இந்தப் போரிலும் நுழைந்து தாக்குவார்; (தொடரும்) |
(212) |
9511. | என்னும்படி, எங்கணும் எங்கணுமாய்த் |
| துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்; |
| பின்னும், அருகும், உடலும், பிரியான் - |
| மன்னன் மகன்! வீரர் மயங்கினரால். |
|
என்னும்படி- என்று சொல்லும்படியாக; மன்னன் மகன்- தசரதன் மகனாகிய இராமன்; எங்கணும் எங்கணுமாய்- எங்கெங்குமாகி; துன்னும் - நெருங்குவான்; சுழலும்- சுற்றுவான்; திரியும்- அலைவான்; சுடரும்- ஒளிர்வான்; பின்னும் - பின்புறத்திலும்; அருகும் - பக்கத்திலும்; உடலும் - உடலிலும்; பிரியான் - பொருதலை விட்டுப் பிரியான்; வீரர் மயங்கினார்- (இந்த நிலை கண்டு) அரக்க வீரர் கலங்கினர். |
(213) |
அறுசீர்ச்சந்த விருத்தம் |
இராமன் வில் திறம் |
9512. | படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் |
| அவிந்தன; |
| விடு படை திசைகள் பிளந்தன; விரி கடல் அளறது |
| எழுந்தன; |
| அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர் விழி |
| அருவிகள் சிந்தின;- |
| கடுமணி நெடியவன் வெஞ்சிலை, 'கணகண, |
| கணகண' எனும்தொறும். |
|
நெடியவன் வெஞ்சிலை- இராமபிரான் கொடிய வில்லில் உள்ள; கடுமணி- கடுமையான ஓசையை எழுப்பும் மணிகள்; கண கண கண கண எனும்தொறும் - கண கண கணகணவென்று ஓசை செய்யும்போதெல்லாம்; மதம் படு கரி, பரி சிந்தின- மதம் பொழியும் யானைகளும் குதிரைகளும் அழிந்தன; பனி வரை இரதம் அவிந்தன- பனி படியும் மலைபோல் உயர்ந்த தேர்கள் அழிந்தன; விடு படை திசைகள் பிளந்தன - இராமன் விடுக்கின்ற கணைகள் திசைகளைப் பிளந்தன; விரி கடல் அளறு (அது) |