பக்கம் எண் :

186யுத்த காண்டம் 

எழுந்தன- அகன்ற கடலிலே சேறுகள் எழுந்தன; அடுபுலி
அவுணர்தம்
- கொல்லும் புலிபோல்வராகிய அரக்கர்களின்;
மங்கையர் அலர் விழி - பெண்டிரின் மலர்ந்த விழிகளில்;
அருவிகள் சிந்தின- கண்ணீர் அருவிகளைச் சிந்தின.
 

(214)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9513.

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு

கோடி;

சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று

எழுந்தாடும்;

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின்

மணி கணில்என்னும்

ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது

அன்றே.*

 

ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி
சேனை காவலர், ஆயிரம் பேர் படின்
- ஆயிரம் யானைகளும்
பதினாயிரம்   தேர்களும், கொலை வல்லனவாகிய    ஒரு கோடி
குதிரைகளும் ஆயிரம்    சேனைத்     தலைவர்களும் இறந்து
விழுந்தால்; கவந்தம் ஒன்று எழுந்து ஆடும்- ஒரு கவந்தம்
எழுந்து கூத்தாடும்; கானம்- சுடலையிலே; ஆயிரம் கவந்தம்
நின்று ஆடின்
- ஆயிரம் கவந்தங்கள் ஆடினால்; கவின் மணி
கணின் என்னும்
- (இராமன் வில்லில் கட்டிய) அழகிய மணி
ஒரு தடவை கணின் என ஒலிக்கும்; அன்று- போர் நடந்த அந்த
நாளில்; ஏனை அம் மணி - அந்த (வில்) மணி; ஏழரை நாழிகை
இனிது ஆடியது
    -    ஏழரை  நாழிகை   நேரம் ஆடியது
(ஆடியபோதெல்லாம் மணி ஒலித்தது)
 

போர்க்களத்தில் தன் வில்லாற்றலால் அழித்த திறம் கூறப்பட்டது.
 

(215)
 

(வேறு)
 

9514.

ஊன் ஏறு படைக் கை வீரர் எதிர் எதிர்

ஊரும்தோறும்

கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின்

கொட்பால்