பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்187

வான் ஏறினார்கள் தேரும், மலைகின்ற வயவர்

தேரும்

தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் - தனி ஏறு

அன்னான்.

 

தனி ஏறு அன்னான்- ஒப்பற்ற சிங்க ஏறு போன்றவனாகிய
இராமன்; ஊன் ஏறு படைக்கை வீரர் எதிர் எதிர் ஊரும்
தோறும்
- தசை ஏறியுள்ள போர்க்கருவியைக் கையில் கொண்ட
அரக்க வீரர்கள் எதிர்த்து எதிரில் ஊர்ந்து வரும்பொழுதெல்லாம்;
கூன் ஏறு சிலையும்   தானும் - வளைவு கொண்ட வில்லும்
தானுமாக; குதிக்கின்ற கடுப்பின் கொட்பால்- குதிக்கின்ற
விரைவான சுழற்சியால்; வான் ஏறினார்கள் தேரும்- போரிலே
வீழ்ந்து வீரசொர்க்கம்   அடைந்த அரக்கரின்   தேர்களையும்;
மலைகின்ற வயவர் தேரும் - (இன்னும் சாகாமல்) தன்னோடு
போரிடுகின்ற அரக்க வீரர்களின் தேர்களையும்; தான் ஏறி வந்த
தேரே ஆக்கினான்
- தான் இயங்கும் நிலம் என்ற தேராகவே
ஆக்கினான்.
 

இராமனுக்குத் தேர் இல்லை என்பதையும் அவன் தரையிலேயே
இயங்கிப்  போர்  செய்தான் என்பதையும் நினைவிலே   கொண்டு
இந்தப் பாட்டின் பொருளை உணரவேண்டும்.
 

(216)
 

9515.

காய் அருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில்

ஒன்றதேனும்,

தூய் எழு பகழி மாரி மழைத் துளித் தொகையின்

மேல;

ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங் கை
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆனது

அன்றே!

 

காய் இருஞ்சிலை ஒன்றேனும் - பகைவரைச் சினக்கின்ற
பெரிய வில் ஒன்றே எனினும்; கணைப் புட்டில் ஒன்றதேனும்-
அம்பறாத் தூணியும் ஒன்றுதான் என்றாலும்; தூய் எழு பகழி
மாரி
- எங்கெங்கும் தூவிப் பெருகுகின்ற அம்பு மழை; மழைத்
துளித் தொகையின் மேல
- மழைத் துளிகளின் எண்ணிக்கைக்கு
மேலாக; அமலன் செங்கை- குற்றமற்றவனாகிய இராமனின்
செம்மைக் கைகள்; ஆயிரம் கைகள் செய்த செய்தன- ஆயிரம்
கைகள் கூடிச் செய்த செயல்களைச் செய்தன; ஆயிரம் கைகள்