கூடி இரண்டு கை ஆனது அன்றே- (திருமாலின்) ஆயிரம் கைகளும் கூடி (இராமபிரானின்) இரண்டு கைகள் ஆயின அல்லவோ! |
இராமன் திருமாலே என்பதை மனங்கொண்டது இச்செய்யுளின் கற்பனை. ஆயிரங்கை கொண்ட பரமனே இரண்டு கை இராமனாக வந்தான் என்பது. |
(217) |
9516. | பொய்; ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு |
| இது அன்றால்; |
| மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த |
| சேனை |
| செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது |
| உண்டே? |
| அய் - இருநூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் |
| அம்மா! |
|
ஒரு முகத்தன் ஆகி- ஒரே முகம் உடையவனாய்; மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்று - இது மனிதனாகக் காணும் தோற்றம் அன்று; பொய்- (நாம் காணும் இத்தோற்றம்) பொய்யே; மெய்யுற உணர்ந்தோம் - இந்த மெய்யை மிகுதியாக உணர்ந்துவிட்டோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை- ஆயிர வெள்ளம் அளவுக்குச் செறிந்துள்ள அரக்கர் சேனையானது; செய்யுறு வினையம் எல்லாம் - செய்கின்ற (போர்ச்) செயலையெல்லாம்; ஒரு முகம் தெரிவது உண்டோ- ஒரே முகம் கொண்டவனால் தெரிந்து கொள்ள முடியுமா! (முடிந்திருக்கிறதே!) அய் இரு நூறும் அல்ல- (இவனுக்கு உரிய உண்மையான முகங்கள்) ஆயிரம் என்பதும் உண்மை அன்று; முகங்கள் அனந்தம் ஆம் - (உண்மையில் இவனுக்குரிய முகங்களுக்கு முடிவே இல்லை.) |
அம்மா - வியப்பு. |
(218) |
9517. | கண்ணுதல் - பரமன்தானும், நான்முகக் கடவுள்தானும் |
| 'எண்ணுதும், தொடர எய்த கோல்' என, |
| எண்ணலுற்றார், |
| பண்ணையால் பகுக்க மாட்டார், தனித் தனி |
| பார்க்கலுற்றார் |
| 'ஒண்ணுமோ, கணிக்க?' என்பார், உவகையின் |
| உயர்ந்த தோளார்.* |