கண்ணுதல் பரமன் தானும்- கண்ணை நெற்றியில் கொண்ட, பரமனாகிய சிவனும்; நான்முகக் கடவுள்தானும்- நான்முகனாகிய கடவுளும்; தொடர எய்த கோல் எண்ணுதும் என- இராமபிரான் தொடர்ந்து எய்கின்ற அம்புகளை எண்ணிக் கணக்கிடுவோம் என்று; எண்ணலுற்றார்- கணக்கிடத் தொடங்கினவர்களாய்; பண்ணையால் பகுக்க மாட்டார்- அம்புகள் தொகுதி தொகுதியாய்ப் பாய்தலால் பிரித்து எண்ண முடியாமல்; உவகையின் உயர்ந்த தோளார்- மகிழ்ச்சியால் ஓங்கிய தோள்களை உடையவர்களாய்; 'ஒண்ணுமோ கணிக்க' என்பார்- கணக்கிட முடியுமோ என்று சொல்லினார்கள். |
அம்புகளை எண்ணமுடியாமல் தோற்றாலும் இராமனது வில்லாற்றல் சிவனுக்கும் நான்முகனுக்கும் மகிழ்ச்சி தந்தது. |
(219) |
தேவர்கள் வியந்து புகழ்தல் |
9518. | 'வெள்ளம் ஈர் - ஐந்து நூறே; விடு கணை அவற்றின் |
| மெய்யே |
| உள்ளவாறு உளவாம்' என்று ஓர் உரை கணக்கு |
| உரைத்துமேனும், |
| 'கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால், |
| கொற்ற |
| வள்ளலே வழங்கினானோ?' என்றனர், மற்றை |
| வானோர். |
|
மற்றை வானோர்- (மேலே குறிக்கப்பட்ட சிவன், நான்முகன் தவிர உள்ள) மற்றத் தேவர்கள்; வெள்ளம் ஈர் ஐந்து நூறே- அரக்கரின் சேனை ஆயிரம் வெள்ளம் எண்ணிக்கை கொண்டது; விடுகணை- இராமன் ஏவுகின்ற அம்புகள்; அவற்றின் மெய்யே உளவாம் என்று- அந்த எண்ணிக்கையின் அளவாகவே இருக்கும் என்று; ஓர் உரை கணக்கு உரைத்தமேனும்- ஒரு பேச்சுக்கு அப்படி ஒரு கணக்குச் சொல்லுவோம் என்றாலும்; கொள்ளை ஓர் உருவை- கூடிக் கிடக்கும் வீரர் கூட்டத்தில் ஓர் உடம்பினை; நூறு கொண்டன பல- நூறு துண்டுகளாக ஆக்கிய கணைகள் பலவாகும்; கொற்ற வள்ளலே வழங்கினானோ- வெற்றிக்கு உரிய இராமன் தான் அத்துணை அம்புகளையும் ஏவியிருப்பானோ; என்றனர்- என்று (வியந்து புகழ்ந்து) கூறினர். |
(220) |