பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்19

ஆண்டு உள குரங்கும், ஒன்றும் அமர்க் களத்து, 

ஆரும் இன்னும்

மாண்டிலர்; இனி மற்று உண்டோ, இராவணன் வீர 

வாழ்க்கை?

 

பூண்டு, ஒரு பகை மேல் புக்கு- போர்க்கோலம் பூண்டு ஒரு
பகை  மேல்  (இலக்குவன்  மேல்  போர்  செய்ய)  புகுந்து; என்
புத்திரனோடும்  போனார்
- என்   மகனோடும்   (போர்க்களம்)
போனவர்களெல்லாம்;    மீண்டிலர்   விளிந்து   வீழ்ந்தார்-
மீளாதவர்களால் இறந்து வீழ்ந்தார்கள்; விரதியர்   இருவரோடும் 
ஆண்டு   உள   குரங்கும்
-   தவ   விரதம்  பூண்ட (இராம
இலக்குவராகிய) இருவரோடும் ஆங்கு இருக்கின்ற குரங்கும்; ஒன்றும் 
அமர்க்களத்து,   ஆரும் இன்னும்  மாண்டிலர்
- பொருந்திய 
போர்க்களத்தில் யாரும்  இன்னும்  இறந்திலர்;  இராவணன் வீர 
வாழ்க்கை  இனிமற்று உண்டோ?
- இராவணனது வீரவாழ்க்கை 
இனிவேறு உண்டோ?
 

போர்க்களத்தினின்றும்  தப்பியோடிய  அரக்கர்  உளரேனும்,
குரங்குகள், மருந்து மலையாலும், தேவர் அருளாலும் அனைத்தும்
உயிர்த்தெழுந்தமையை நோக்க  இராவணன் தன்னைப் பழித்துக்
கூறிக் கொள்ளும் இக்கூற்றின் பொருத்தத்தை உணரலாம். 
 

(37)
 

9223.

கந்தர்ப்பர், இயக்கர், சித்தர், அரக்கர்தம் 

கன்னிமார்கள்,

சிந்து ஒக்கும் சொல்லினார், உன் தேவியர், திருவின் 

நல்லார்,

வந்து உற்று, 'எம் கணவன்தன்னைக் காட்டு' என்று, 

மருங்கில் வீழ்ந்தால்,

அந்து ஒக்க அரற்றவோ, நான் கூற்றையும் ஆடல் 

கொண்டேன்!*

 

கந்தர்ப்பர், இயக்கர், சித்தர் அரக்கர் தம் கன்னிமார்கள் 
- கந்தருவர், இயக்கர், சித்தர் அரக்கர் என்பார் தம் புதல்வியராய்; 
சிந்து ஒக்கும் சொல்லினார்
- 'சிந்து' என்னும் பண்ணினை ஒத்துப் 
பேசும் சொல்லினிமையை உடையவர்களும்; திருவின் நல்லார் உன்
தேவியர் வந்து உற்று
- திருமகளினும் அழகு மிக்கவர்களுமாகிய
உன் மனைவிமார்கள் வந்து அடைந்து; 'எம் கணவன்