சென்று சேர்ந்த தன்மை; பிண்டத்தில் கருவாம் தன் பேர் உருக்களை - பிண்டத்திலே கருவாகியுள்ள தன் பெரிய படைப்புகளை; அண்டத்தை நிறையப் பெய்து- அண்டம் நிறையும்படியாக இட்டு; குலுக்கியது அனைய ஆன- குலுக்கப் பட்டவை போல அமைந்தன. |
பல இடங்களிலும் கடந்து போகின்ற அரக்கர்களை கழுத்து, மேல் கீழ் என்று எல்லா இடங்களிலும் அம்புகள் சென்று கலக்கின்றன. பிண்டத்தில் கருவாகிய உருக்களைப் பிரமன் பேரண்டத்திலே நிறைய இட்டு நிரப்பிய தன்மை போல - அம்புகள் கருக்கள்; அம்புகள் கீழ் மேல் இடை எங்கும் அரக்கர்களோடு கலந்து நிரம்பியுள்ளவை. கருக்களாகிய உருக்களும் அண்டம் நிறையப் பெய்யப் பெற்றுள்ளன போலும் எனப் பொருத்துக. |
(222) |
பத்துக் கோடி வீரர் மாள, எஞ்சியவர் தெய்வப் படைக்கலங்கள் கொண்டு தாக்க வருதல் |
9521. | கோடி ஐ - இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி, |
| ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும் |
| 'வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் |
| வீசி, |
| மூடுதும் இவனை' என்று, யாவரும் மூண்டு |
| மொய்த்தார். |
|
ஐ இரண்டு கோடி தொக்க- பத்துக் கோடிப் பேராகக் கூடி நின்ற; படைக்கல மள்ளர்- படைக்கலங்களை ஏந்திய வீரர்கள்; கூவி - ஆரவாரித்து; ஓர் பக்கம் ஆக ஓடி - ஒரு பக்கத்தில் ஓடிச் சென்று; உயிர் இழந்து உலத்தலோடும்- உயிரை இழந்து அழிந்த நிலையில்; வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி மூடுதும் இவனை என்று- வீழ்ச்சி பெற்று அழிவது ஏன்? தேவர்களிடம் பெற்ற படைக்கலங்களை எறிந்து இந்த இராமனை முற்றிலுமாக மறைத்து விடுவோம் (மறைத்து அழித்திடுவோம்) என்று; யாவரும் மூண்டு மொய்த்தார்- எஞ்சியிருந்த அரக்கர் எல்லாரும் பொங்கிச் செறிந்தனர். |
(223) |
தெய்வப் படைகளைத் தெய்வப் படைகளாலேயே இராமன் தடுத்தல் |
9522. | விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக |
| கொண்டு ஒருங்கு உடனே விட்டார்; குலுங்கியது |
| அமரர் கூட்டம்; |