| அண்டமும் கீழ் மேலாக ஆகியது; அதனை |
| அண்ணல் |
| கண்டு, ஒரு முறுவல் காட்டி, அவற்றினை அவற்றால் |
| காத்தான். |
|
விண்டுவின் படையே ஆதி- திருமால் அஸ்திரம் முதலாக; வெய்யவன் படை ஈறாக- நெருப்பிறைவன் அஸ்திரம் ஈறாக; கொண்டு- (பல தெய்வ அத்திரங்களைக்) கைக்கொண்டு; ஒருங்கு உடனே விட்டார்- ஒன்றாகச் சேர்ந்து விரைவாக ஏவினார்கள் அமரர் கூட்டம் நடுங்கிற்று; அண்டமும் கீழ் மேலாக ஆகியது- அண்டமும் கீழே மேலாக நிலை குலைந்தது; அதனை- அவ்வாறு ஆகிவிட்டதை; அண்ணல்- இராமபிரான்; கண்டு ஒரு முறுவல் காட்டி- ஒரு புன்சிரிப்பைக் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான். அரக்கர் ஏவிய தெய்வப் படைகளை தெய்வப் படைகளால் தடுத்தான். |
(224) |
9523. | 'தான் அவை தொடுத்த போது, தடுப்ப அரிது; |
| உலகம்தானே |
| பூ நனி வடவைத் தீயின் புக்கெனப் பொரிந்து |
| போம்' என்று |
| ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப அருங் கோடி |
| அம்பால் |
| எனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் |
| இட்டான். |
|
தான் அவை தொடுத்தபோது- தானே அந்தத் தெய்வப் படைகளைத் தொடுத்தால்; தடுப்ப அரிது- எவராலும் தடுத்து நிறுத்தல் அரிதாகும்; உலகம் தானே வடவைத் தீயின் பூ நனி புக்கெனப் பொரிந்துபோம்- உலகம் வடவை (ஊழிக்கால) நெருப்பிலே மலர் புகுந்தது போலப் பொரிந்து போகும்; என்று ஆனது தெரிந்த வள்ளல்- என்ற அந்த உண்மையைத் தெரிந்த வள்ளலாகிய இராமன்; அளப்ப அருங்கோடி அம்பால்- அளவிட முடியாத கோடிக்கணக்கான அம்புகளால்; ஏனையர் தலைகள் எல்லாம் - முன்னமே அழிந்தார்போக மற்றவர்களின் தலைகளையெல்லாம்; இடியுண்ட மலையின் இட்டான்- இடியால் தாக்கப்பட்ட மலை எப்படிச் சரியுமோ அப்படிக் குவித்தான். |