அரக்கர் ஏவிய தெய்வப் படைகளைத் தடுப்பதற்காகத் தெய்வப் படைகளைப் பயன்படுத்தினான். அரக்கரை அழிக்கப் பயன்படுத்த வில்லை. |
(225) |
9524. | ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து |
| வீழ்ந்தார்; |
| மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறைப் பாரம் |
| நீங்கி; |
| மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே, வீங்கு ஒலி |
| வேலைநின்றும் |
| போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் |
| பொங்கி! |
|
ஆயிர வெள்ளத்தோடும்- ஆயிர வெள்ளம் அளவினதாகிய அரக்கர்கள் யாவரும்; அடு களத்து- கொலைக் களத்திலே; அவிந்து வீழ்ந்தார்- இறந்து வீழ்ந்தார்கள்; மா இரு ஞாலத்தாள்- மிகவும் பெருமைக்குரிய நில மகள்; தன் வன் பொறைப் பாரம் நீங்கி - தன்மீது இதுவரை இருந்துவந்த கொடிய சுமையாகிய பாரம் நீங்கப்பெற்று; வீங்கு ஒலி வேலை நின்றும்- பேரொலி செய்யும் கடலிலிருந்து; ஒருங்கு போய் - ஒன்றாகச் சென்று; அண்டத்தோடும்-; கோடி யோசனைகள் பொங்கி- கோடி யோசனை தூரத்துக்குப் பொங்கி; மீ உயர்ந்து எழுந்தாள்- மேலோங்கி எழுந்தார். |
(226) |
தேவர் முதலியோர் துயரம் தீர்ந்து இராமனை வாழ்த்துதல் |
9525. | 'நினைந்தன முடித்தேம்' என்னா, வானவர் துயரம் |
| நீத்தார்; |
| 'புனைந்தனென் வாகை' என்னா, இந்திரன் உவகை |
| பூத்தான்; |
| வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று |
| உயர்ந்தமாதோ; |
| அனந்தனும் தலைகள் ஏந்தி, அயாவுயிர்த்து, அவலம் |
| தீர்ந்தான். |