நினைந்தன முடித்தோம் என்று- நாம் எண்ணியவை எண்ணியபடியே முடித்துவிட்டோம் என்று; வானவர் துயரம் நீத்தார் - தேவர்கள் கவலையை ஒழித்தார்கள்; புனைந்தனென் வாகை என்னா- (வெற்றி பெற்று) வாகை மாலை அணிந்தேன் என்று; இந்திரன் உவகை பூத்தான்- இந்திரன் மகிழ்ச்சியால் மலர்ந்தான்; வனைந்தன அல்லா வேதம்- எவராலும் செய்யப்படாதனவாகிய வேதங்கள்; வாழ்வு பெற்று உயர்ந்த- உயிர் வாழ்வைப் பெற்று உயர்ந்தன. |
மானிடர் எவராலும் செய்யப்படாதவை வேதங்கள்; 'எழுதாக் கிளவி' என்பர். அதனை 'வனைந்தன அல்லா வேதம்' என்றார். மாதோ : அசை. |
(227) |
9526. | தாய், 'படைத்துடைய செல்வம் ஈக!' என, தம்பிக்கு |
| ஈந்து, |
| வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் |
| மேவி, |
| தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர் |
| துடைத்தானை நோக்கி, |
| வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார், |
| வணக்கம் செய்தார். |
|
தாய்- (சிறிய) தாயாகிய கைகேயி; 'படைத்துடைய செல்வம் ஈக'- உனக்கு உரியதாக வந்த செல்வத்தைக் கொடுத்துவிடு; என - என்று சொல்ல; தம்பிக்கு ஈந்து- தம்பியாகிய பரதனுக்குத் தந்துவிட்டு; வேய் படைத்துடைய கானம்- மூங்கில்கள் வளர்ந்துள்ள காட்டுக்கு; விண்ணவர் தவத்தின் மேவி- தேவர்கள் செய்த தவத்தால் வந்தடைந்து; தோய் படைத்தொழிலால்- ஈடுபாடு கொண்ட படைக்கலத் தொழிலால்; யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி- எல்லாருடைய துயரத்தையும் போக்கியவனைப் பார்த்து; வாய் படைத்துடையார் எல்லாம்- வாய் படைத்தவர்கள் எல்லாரும்; வாழ்த்தினர் வணக்கம் செய்தார்- வாழ்த்தி வணங்கினர். |
வாய் பெற்றார் பெரும் பயன் அடைவது துயர் துடைத்த இராமனை வாழ்த்தலே என்ற கருத்தில் 'வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார்' என்றார். |
(228) |