பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்195

9527.

தீ மொய்த்த அனைய செங் கண் அரக்கரை முழுதும்

சிந்தி,

பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற,

நின்றான் -

பேய் மொய்த்து, நரிகள் ஈண்டி, பெரும் பிணம்

பிறங்கித் தோன்றும்,

ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன்

ஒத்தான்.

 

தீ மொய்த்த அனைய செங்கண் அரக்கரை- தீச் செறிந்தது
போன்ற சிவந்த  கண்கள்    கொண்ட அரக்கர்களை;   முழுதும்
சிந்தி
- முற்றாக  அழித்து; பூ  மொய்த்த கரத்தர் ஆகி - பூ
நிறைந்த கைகள்   உடையவராய்; விண்ணவர் போற்ற நின்றான்
- தேவர்கள்   போற்றும்    படியாக நின்ற இராமபிரான்; பேய்
மொய்த்து
  -  பேய்கள்   நிரம்பக்   கூடியும்; நரிகள் ஈண்டி-
நரிகள்    நிறையக்    கூடியும்;  பெரும்   பிணம்  பிறங்கித்
தோன்றும்
- ஏராளமான  பிணங்கள் விளங்கத்   தோன்றுகின்ற;
ஈமத்துள்- சுடுகாட்டில்;  தமியன்   நின்ற  - தனியனாக நின்ற;
கறைமிடற்று இறைவன் ஒத்தான்- கறையைக் கழுத்திலே கொண்ட
சிவபிரானைப் போல் இருந்தான்.
 

(229)
 

9528.

அண்டம் மாக் களமும், வீந்த அரக்கரே உயிரும்

ஆக,

கொண்டது ஓர் உருவம்தன்னால், இறுதிநாள் வந்து

கூட,

மண்டு நாள், மறித்தும் காட்ட, மன்னுயிர் அனைத்தும்

வாரி

உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான்.

 

அண்டம் மாக் களமும்- இந்த அண்டமே பெரிய களமாகவும்;
வீந்த அரக்கரே உயிரும் ஆக- வீழ்ந்து விட்ட அரக்கர்களை
உயிர்க்   கூட்டங்களாகவும்  ஆக;  கொண்டது   ஓர் உருவம்
தன்னால் 
-  மேற்கொண்ட ஒப்பற்ற  உருவத்தால்; இறுதி நாள்
வந்து கூட மண்டும் நாள்
- அழிவுக்காலம் வந்து சேர வரும்
கடைநாளிலே;   மறித்தும்   காட்ட-   திரும்பவும் படைத்துக்
காட்டுவதற்காகவே; மன்னுயிர் அனைத்தும் வாரி உண்டவன்-