தெளிவு காணல்வேண்டும். மேலும் கொலை செய்தவனை 'வள்ளல்' என்ற வளச் சொல்லால் குறித்தமையும் கருதத் தக்கது. 'சாத்திரக் கருத்துப்படி இறைவனுடைய பஞ்ச கிருத்தியங்களில் ஒன்றான சம்ஹாரமும் அருட்செயல் என்றே அழைத்தல் உணர்க' என்பது ஐயரவர்கள் நூலகப் பதிப்பு விளக்கம். |
(231) |
இனி, மேல் சொல்ல இருப்பவை |
9530, | இவ் வழி இயன்ற எல்லாம் இயம்பினாம்; இரிந்து |
| போன |
| தெவ் ஆழி ஆற்றல் வெற்றிச் சேனையின் செயலும், |
| சென்ற |
| வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும், இளைய |
| வீரன் |
| எவ்வம் இல் ஆற்றல் போரும், முற்றும் நாம் |
| இயம்பலுற்றாம். |
|
இவ் வழி- இராமன் மூலபலச் சேனையை எதிர்த்த இடத்தில்; இயன்ற எல்லாம் இயம்பினாம்- நிகழ்ந்தவற்றையெல்லாம் சொன்னோம்; இரிந்து போன - முதலில் அரக்கர் படையைக் கண்டு அஞ்சி ஓடிப் போன; தெவ் அழி ஆற்றல்- பகைவரை அழிக்கும் ஆற்றல் மிக்க; வெற்றிச் சேனையின் செயலும்- வெற்றி பெறுவதற்கு உரிய (குரங்குச்) சேனையின் செயலையும்; வெவ் வழி அரக்கர் கோமான் செய்கையும்- கொடிய வழிகளில் செயல்படுகின்ற அரக்கர் மன்னனாகிய இராவணன் செயலையும்; இளைய வீரன் - இளையவனாகிய இலக்குவ வீரனின்; எவ்வம் இல் ஆற்றல் போரும்- குற்றம் இல்லாத ஆற்றல் மிக்க போர்ச் செயலையும்; நாம் முற்றும் இயம்பலுற்றாம்- நாங்கள் முழுமையாகச் சொல்லத் தொடங்கினோம். |
(232) |