குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல் |
9531. | 'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; |
| பெயர்ந்து போய், நாம் |
| விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை |
| விலக்கற்பாலார்; |
| வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்' |
| என்னா, |
| இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது |
| இப்பால். |
|
பெரும்படைத் தலைவர் யாரும் - பெருமையுடைய படையின் தலைவர்கள் எல்லாரும்; பெயர்ந்திலர் - நீங்கினர் அல்லர்; பெயர்ந்து போய் - படை வீரர் போர்க்களத்தை விட்டு நீங்கி; நாம் விரும்பினம் வாழ்க்கை என்றால்- நாம் மட்டும் உயிர் வாழ விரும்பினாம் என்றால்; இடை விலக்கற்பாலார் யார் - இடையில் நின்று நம்மைத் தடுப்பதற்குரியவர் யார்?; வரும் பழி துடைத்தும்- (அதனால்) வருகின்ற பழியைத் துடைப்போம்; யாமும் வானில் வைகுதும் என்னா- நாங்களும் துறக்கவுலகில் வாழ்வோம் என்று உறுதி கொண்டு; இருங்கடல் பெயர்ந்தது என்ன- பெரிய கடல் நிலை பெயர்ந்து வந்தது போன்று; இப்பால் தானையும் மீண்டது - இப்பக்கம் வானரப்படையும் மீண்டு வந்தது. |
(1) |
இராவணன் போர்க்களம் செல்லுதல் |
கலித்துறை |
9532. | சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த, |
| எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு |
| இமைக்கும், |
| செல்லும் தேர்மிசைச் சென்றனன் - தேவரைத் |
| தொலைத்த |
| வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், |
| விளங்க. |
|
சில்லி ஆயிரம்- ஆயிரம் சக்கரங்களோடும்; சில் உளைப் பரியொடும் சேர்ந்த- சிலவாகிய பிடரி மயிருடைய ஆயிரம் |