குதிரைகளோடும் சேர்ந்ததும்; எல்லவன் கதிர் மண்டலம்- கதிரவன் செங்கதிர் மண்டலத்தோடு; மாறுகொண்டு இமைக்கும் - ஒப்புமை பூண்டு ஒளி வீசுவதும்; செல்லும் தேர்மிசை - விரைந்து போகும் செலவினையும் உடைய தேர் மீது ஏறி; தேவரைத் தொலைத்த- வானவர்களையும் அழித்த; வில்லும் வெங்கணைப் புட்டிலும்- கொடிய வில்லும் அம்பு நிறைந்த அம்பறாத்தூணியும்; கொற்றமும் விளங்கச் சென்றனன்- வீரமும் விளங்க (இராவணன் போர்க்களத்திற்குச்) சென்றான். |
(2) |
9533. | நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி, |
| ஆறுபோல் மத மாகரி ஐ - இரு கோடி |
| ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி |
| சீறு கொள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. |
|
அன்று சீறுகொள் அரிஏறு அனானுடன் - அப்போது சீறுகின்ற வலிய ஆண் சிங்கம் போன்ற இராவணனுடன்; நூறு கோடி தேர்- நூறு கோடி தேர்களும்; இருநூற்றுக் கோடி நொறில் பரி- இருநூறு கோடி விரைந்து செல்லும் குதிரைகளும்; ஐயிரு கோடி- பத்துக்கோடி; ஆறுபோல் மதமாகரி- ஆற்றுநீர் போல் ஒழுகும் மத நீரையுடைய பெரிய யானைகளும்; இவற்று இரட்டி ஏறுகோள் உறு பதாதியும்- இருபத்தாறு கோடி சிங்க ஏற்றைப் போன்ற காலாட்படையும்; சென்றன - உடன் போயின. |
(3) |
9534. | 'மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், |
| முனையின் |
| ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!' என்று |
| இசைக்கும் |
| ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி |
| ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. |
|
மூன்று வைப்பினும்- விண்ணுலகு, மண்ணுலகு, பாதலம் எனும் மூன்றுலகத்திலும்; அப்புறத்து உலகினும் - அவற்றிற்கு அப்பாற்பட்ட உலகத்திலும் உள்ளவர்களாய்; முனையின் ஏன்று கோளுறும் வீரர்கள் - போர்முனையில் எதிர்த்துப் போர் புரியும் அரக்கவீரர்கள் யாவரும்; வம்மின் என்று இசைக்கும் - வாருங்கள் என அழைப்பது போன்று ஒலிக்கும்; ஆன்ற பேரியும்- பெரிய |